புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி காரி டென் பூம்

மிஷனரி காரி டென் பூம் நினைவு தினமும் பிறந்தநாளும்*
1940ம் ஆண்டில் ஹாலந்து தேசம் ஜெர்மானியப் படை க ளி டம் ச ர ண டை ந் த து
ஹி ட் ல ரி ன் கொடுமைகளுக்குத் தப்பி ஹாலந்து தேசத்திற்கு வந்த யூதர்கள் பிடித்துக் கொல்லப்பட்டனர்.
சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர் . காரிடென்பூம் குடும்பம் , ஹாலந்து தேசத்தில் கடிகாரம் செய்யும் தொழிற்கூடம் ஒன்றை நடத்தி வந்தனர்.
உயிருக்கு பயந்து ஓடி ஒழிந்த யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்க தங்கள் வீட்டைத் திறந்து கொடுத்தனர்.
நூற்றுக்கணக்கான யூதர்கள் காரியின் குடும்பத்தினரால் சாவுக்குத் தப்பினார்கள் .
1943ம் ஆண்டு ஹிட்லரின் ரோந்து படை குடும்பத்தை குறிவைத்தது . கூண்டோடு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் ; சித்தரவதைகளினால் காரியின் தந்தையும் , தங்கை பெத்சியும்மரித்துப்போனார்கள்.
காரி சிறைக்குள்ளே ஆராதனைகளை நடத்தி மக்களை ஆண்டவருக்குள் நடத்த ஆரம்பித்தார்.
தினமும் மறைவிடத்தில் இரண்டு ஆராதனைகள் நடத்தப்பட்டன.
காரியின் டச்சு வேதாகமம் சிறைச்சாலையிலுள்ள அனைவருக்கும் மிகுந்த ஆறுதலாகக் காணப்பட்டது . ஆண்டவரின் அநாதி தீர்மானத்தின்படி காரி டென் பூம் விடுதலை செய்யப்பட்டார்.
தேவன் தனக்கு செய்த மகத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார் . இரண்டாம் உலகப்போரில் *அனாதைகளான மக்களுக்காக இல்லம்* ஒன்றைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.
பல நாடுகளுக்குச் சுற்றுபயணம் செய்து தனது சிறைச்சாலை அனுபவங்களை எடுத்துரைத்து மக்களை விசுவாசத்தில் நிலைபெறச் செய்தார்.
காரி டென் பூம் ஓர் சிறந்த எழுத்தாளரும் ஆவார் . *" மறைவிடம் "* என்ற நூல் பிரபலமானது .
பின்னர் அது படக்காட்சியாகவும் தயாரிக்கப்பட்டது.
பிறருக்காகவே வாழ்ந்த காரி டென் பூம் தனது பிறந்த தினத்திலேயே ஏப்ரல் 15 , 1983ல் விண்ணுலகம் சென்றார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory