மாதிரி கிறிஸ்தவ கிராமத்தின் வரலாறு
வெள்ளாளன்விளை
வெள்ளாளன்விளை
இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் என்ற இடத்தில் பிறந்தவர் *கனம் ஜான் தாமஸ்*.
1836 - ம் ஆண்டு CMS சங்கத்தின் மூலம் மிஷனெரியாக சென்னை வந்தார்.
CMS சங்கத்தினரின் கட்டளைக்கிணங்கி 1839 - ல் மெஞ்ஞானபுரம் பங்களாவில் குடும்பமாய் தங்கி சுவிசேஷ பணியில் ஈடுபட்டார்.
வெள்ளாளன்விளையின் மத்தியில் அமைந்திருந்த ஆலமரத்துக்கு அருகில் நின்று கடின உழைப்பின் காரணமாக இளைப்பாறிக் கொண்டிருந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
ஒருநாள் சிலர் துப்பாக்கியுடன் வந்து *கனம் ஜான் தாமஸ்* அவர்களைக் கொல்ல நினைக்கவே ஊழியம் செய்யாமல் , அங்கிருந்த ஓர் ஆலமரத்தடியில் முழங்காலில் நின்று , ஆண்டவரே , இவர்களின் இருதயத்தைத் திறந்தருளும் என ஜெபித்து முடித்து பின்னர் தீர்க்கதரிசனம் போன்று இவ்வாறு கூறினார்.
பிசாசை வணங்கும் மக்கள் ஒருவரும் இல்லாதபடி இவ்விடத்தில் ஒரு கிறிஸ்துவ ஆலயம் கட்டப்படும் நாள் சீக்கிரம் வரும் என்றார்.
அந்த நாள் வரத்தான் போகிறது ” என்று தீர்க்கத்தரிசனம் உரைத்தார்.
அவரது சுவிசேஷத்தால் முதன் முதலில் மனம் மாறியவர்தான் சுடலையாடும் பெருமாள் ( எ ) கி . மு . சுவாமியடியான் . 1842 - ம் ஆண்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடியது . சுமார் 300 பேர் புதிய கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.
இசக்கியம்மன் கோவில் இருந்த இடத்தில் ஒரு ஜெபவீடு கட்டப்பட்டது.
இதனால் பெரும் எதிர்ப்புகள் உண்டானது.
புதியதாக கட்டப்பட்ட ஜெப வீடும் , கிறிஸ்தவர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது. பலர் பின்வாங்கினர் .
1844 - ம் ஆண்டில் மறுபடியும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது . ஆலமரத்திற்கு அருகில் ஒரு புதிய இடம் வாங்கப்பட்டு பெரிய கூரையாலான ஆலயம் கட்டப்பட்டது .
வெள்ளாளன்விளை திருச்சபையின் தந்தை கனம் வேதநாயகம் தாமஸ் . *" வேதத்தில் சிறந்தது வெள்ளாளன்விளை "* என்ற அன்றைய கூற்றுக்கும் காரணமாய் அமைந்தவர் கனம் வேதநாயகம் தாமஸ் . இவரின் தகப்பனார் " ஞானியார் பூர்வீக இந்து நாடார் குடும்பத்தைச் சார்ந்தவர்.
இவர் செட்டிவிளை என்ற ஊரைச் சார்ந்தவர் என நம்பப்படுகிறது . ஞானியார் ஓர் தானிய வியாபாரி.
இவரது மகனாக 1821 - ம் ஆண்டு பிறந்தவர் வேலாயுதம்.
சிறுவயதில் தன் தந்தையுடன் வியாபாரத்துக்குச் செல்லும்போது கனம் ஜாண் தாமஸ் மிஷினெரியின் சுவிஷேச செய்திகளை கேட்டார்.
1839 ம் ஆண்டு மெஞ்ஞானபுரம் மாணவர் விடுதி பள்ளியில் சேர்ந்து படித்தார் .
1839 - ல் கனம் ஜான்தாமஸ் அவர்களால் திருமுழுக்கு பெற்று வேதநாயகம் தாமஸ் என்ற பெயரை பெற்றார் .
1858 - ல் வெள்ளாளன்விளையில் முழுநேர சபை ஊழியராக கனம் ஜாண் தாமஸ் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
1869 - ம் ஆண்டு ஜனவரி 31 - ம் நாள் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெற்ற பட்டாபிஷேக் ஆராதனையில் சென்னை பேராயர் பிரட்ரிக் கெல் அவர்களால் உதவி குருவாக அபிஷேக பண்ண ப்பட்டார் .
1871 டிசம்பர் 24 - ம் நாள் குருவானாராக . அபிஷேகம் பெற்று தொடர்ந்து வெள்ளாளன்விளையில் பணியாற்றினார் .
1875 - ல் இசக்கியம்மன் கோயில் இருந்த இடத்தில் ஆலயத்தை கட்டி முடித்தார்.
வெள்ளாளன்விளை திருச்சபையின் தந்தை கனம் வேதநாயகம் தாமஸ் அவர்கள் , வெள்ளாளன்விளையை *மாதிரி கிறிஸ்தவ கிராமமாக* மாற்றி அமைத்தார் .
இவர் வெள்ளாளன்விளையில் 10 ஆண்டுகள் முழு நேர சபை ஊழியராகவும் , 2 ஆண்டுகள் உதவி குருவாகவும் , 20 ஆண்டுகள் குருவானவராகவும் மொத்தம் 32 ஆண்டுகள் ( 1858 - 1889 ) இறைபணி செய்தார் .
தனது 68 - வது வயதில் 23 . 06 . 1889 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
இவரது உடல் வெள்ளாளன்விளை துய திரித்துவ ஆலயத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
1874 - ம் ஆண்டு ஆகஸ்ட் 17 - ல் கனம் வேதநாயகம் தாமஸ் - ஹெலன் ஹேஸ்டிங்ஸ் தம்பதியாருக்கு வெள்ளாளன்விளையில் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு அவ்வாண்டு அக்டோபர் 4 - ம் நாள் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு *வேதநாயகம் சாமுவேல் அசரியா* என பெயரிடப்பட்டது .
இவரே இந்தியாவின் *முதல் ஆங்கிலிக்கன் திருச்சபை பேராயர்*, பிராட்டஸ்டண்ட் புனிதர் , இந்தியாவின் அப்போஸ்தலன் , *இந்தியாவின் பெரிய நட்சத்திரம் ,* வெள்ளாளன்விளையில் தோன்றிய தெய்வ மனிதன் என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவர்.
சுவிஷேசப் பணிக்காக தன் நல்ல வாழ்க்கையை தியாகம் செய்தவர் பேராயர் V . S . அசரியா . IMS , NMS ஆகிய சுவிசேஷ சங்கங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை . *தோர்ணக்கல் திருமண்டலத்தை உருவாக்கியவர்*.
*தென்னிந்திய திருச்சபை ( CSI ) உருவாக காரணமாக இருந்தவர்*
சுவிசேஷ பணிக்காக ஓய்வின்றி உழைத்த இவர் 1945 - ம் ஆண்டு ஜனவரி 1 - ம் நாள் தோர்ணக்கலில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
இவரது கல்லறை தோர்ணக்கல் பேராலயத்தின் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தூய திரித்துவ ஆலயம், வெள்ளாளன்விளை வரலாற்றிலிருந்து திரட்டியது ....
No comments:
Post a Comment