புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பொன்னங்கால் புரம் சபை

பொன்னங்கால் புரம்* சபை வரலாறு
பாபநாசம் , தாமிரவர்ணித் தண்ணீரைக் கட்டுப்படுத்தும் நீர்த்தேக்கம் அந்தக் காலம் கிடையாது.
1922 ஆம் ஆண்டில் தாமிரவர்ணியில் பெரும் வெள்ளப் பெருக்கு எடுத்தது.
மேற்கே ஆற்றோரம் குடியிருந்த மூன்று குடும்பத்தார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கிறிஸ்தவர்.
வெள்ளம் அதிகரித்து மக்கள் ஆற்றோடு போகும் தருணத்தில் , ஆற்றின் ஒரு கரை உடையவே வெள்ளம் குறைந்தது. மக்கள் உயிர் தப்பியது . அந்தக் கிறிஸ்தவக் குடும்பம் இயேசு சுவாமிக்கு நன்றி கூறியது.
அரசு உதவியினால் மூன்று குடும்பத்தினரும் மேட்டுப் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
அக்குடியிருப்பின் அண்மையில் ஒரு கால்வாய் ஓடுகிறது.
இதை வெட்டிய அலுவலர் பெயர் *பொன்னன்* அதனால் அந்தக் கால்வாய்க்கும் *பொன்னன் கால்வாய்* என்ற பெயர் வழங்கியது . குடியிருப்பை *பொன்னன் கால்புரம்* என்று அழைத்தனர்.
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தார் திருவைகுண்டம் குருசேகரத்தை அண்டி ஒரு சபையை உருவாக்கி ஒருசிறு ஆலயத்தைக் கட்டினர்.
ஒரு பாடசாலையையும் ஆரம்பித்தனர்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory