பொன்னங்கால் புரம்* சபை வரலாறு
பாபநாசம் , தாமிரவர்ணித் தண்ணீரைக் கட்டுப்படுத்தும் நீர்த்தேக்கம் அந்தக் காலம் கிடையாது.
1922 ஆம் ஆண்டில் தாமிரவர்ணியில் பெரும் வெள்ளப் பெருக்கு எடுத்தது.
மேற்கே ஆற்றோரம் குடியிருந்த மூன்று குடும்பத்தார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கிறிஸ்தவர்.
வெள்ளம் அதிகரித்து மக்கள் ஆற்றோடு போகும் தருணத்தில் , ஆற்றின் ஒரு கரை உடையவே வெள்ளம் குறைந்தது. மக்கள் உயிர் தப்பியது . அந்தக் கிறிஸ்தவக் குடும்பம் இயேசு சுவாமிக்கு நன்றி கூறியது.
அரசு உதவியினால் மூன்று குடும்பத்தினரும் மேட்டுப் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
அக்குடியிருப்பின் அண்மையில் ஒரு கால்வாய் ஓடுகிறது.
இதை வெட்டிய அலுவலர் பெயர் *பொன்னன்* அதனால் அந்தக் கால்வாய்க்கும் *பொன்னன் கால்வாய்* என்ற பெயர் வழங்கியது . குடியிருப்பை *பொன்னன் கால்புரம்* என்று அழைத்தனர்.
ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தார் திருவைகுண்டம் குருசேகரத்தை அண்டி ஒரு சபையை உருவாக்கி ஒருசிறு ஆலயத்தைக் கட்டினர்.
ஒரு பாடசாலையையும் ஆரம்பித்தனர்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment