வேத புத்தகமானது எந்நிலையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் - தாமஸ் கிராண்மர்
இங்கிலாந்து நாட்டில் மேரி என்ற அரசி பட்டத்திற்கு வந்தாள் . தன் நாட்டில் காணப்பட்ட சீர்திருத்தவாதிகளை ஒழிக்கும் எண்ணத்துடன் மும்முரமாய் செயல்பட ஆரம்பித்தாள் .
நாட்டின் பல பாகங்களிலே , தூய்மையான வாழ்க்கை நடத்திய ஆண்களும் , பெண்களும் , சிறுவர்களும் , சிறுமிகளும் தங்கள் விசுவாசத்தின் பொருட்டாக , சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் .
பலர் நாட்டை விட்டே துரத்தப்பட்டனர் மற்றும் சிலர் உயிரோடு வைத்து கொளுத்தப்பட்டார்கள் .
நாட்டிலே இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது .
இரத்த மேரி என்றழைக்கப்பட்ட இவ்வரசியால் , அதிகமாக துன்புறுத்தப்பட்டவர்களில் ஒருவரே தாமஸ் கிராண்மர் .
கேம்பிரிட்ஜ் கல்வி சாலையில் உயர்கல்வி கற்றவர் .
1533ஆம் ஆண்டு பேராயராக ஹென்றி 8 என்ற அரசனால் , பதவியேற்றவர் .
அரசனுக்கு சிறந்த ஆலோசகராக செயல்பட்டவர் .
1538ஆம் ஆண்டு , அவ்வரசனுக்கு சிறந்த ஓர் ஆலோசனை வழங்கினார் . ஒவ்வொரு திருச்சபையிலும் , வேத புத்தகமானது எந்நிலையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அது .
அதன்படி திருச்சபைகள் அனைத்திலும் மக்கள் வேதாகமத்தைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது .
இதனால் , திருச்சபையின் சீர்கேடுகளை மக்கள் களைந்து , சிறந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர் .
கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி குன்றி , புரோட்டஸ்டாண்ட்தலைநிமிர ஆரம்பித்தது .
ஆயினும் , வெகுவிரைவில் ஹென்றி 8 தன் மகன் எட்வர்ட் 6ஆல் கொல்லப்பட்டார் .
அவரும் வெகு விரைவில் மரிக்கவே மேரி அரசி பட்டத்திற்கு வந்தாள் .
திருச்சபையின் நிலைமைகள் தலைகீழானது , மீண்டும் கத்தோலிக்கம் தழைத்தது .
புரோட்டஸ்டாண்டை சார்ந்தவர்கள் விரட்டி பிடிக்கப்பட்டு கிறிஸ்துவின் மேல் உள்ள பற்றுதலால் அவர்கள் கொல்லப்பட்டனர் .
பேராயராக காணப்பட்ட கிராண்மரும் , அவ்வரசியால் பிடிக்கப்பட்டு , உயிரோடேதீயில் தள்ளப்பட்டு கொல்லப்பட்டார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment