தொழுநோயாளிகளின் நலனுக்காகவே உழைத்த பால்பிராண்ட் பிறந்த மற்றும் நினைவு தினம்
நீங்கள் மிஷனெரி பிள்ளைகளா ?
அப்படியானால் மிஷனெரிப் பணியின் தாகம் உங்களுக்கு இருக்க வேண்டும் .
சரி , நீங்கள் மிஷனெரி பிள்ளைகளாக இல்லையானாலும் பரவாயில்லை .
நீங்கள் ஆண்டவரின் பிள்ளைகள் .
உங்களுக்கு ஊழியத்தைக் குறித்த வாஞ்சைகண்டிப்பாக இருக்க வேண்டும் .
பால் பிராண்ட் . கொல்லி மலையின் *விடி வெள்ளிகளான ஜெசிமன் பிராண்ட் மற்றும் ஈவ்லின் பிராண்ட்* அவர்களின் மூத்த மகன் .
தனது தங்கையுடன் இருண்ட மலைப்பகுதியில் உள்ள தங்களது மரவீட்டில் தனியாக இருக்கும்போது ஒரு நாள் அவரது தாய் பின்வருமாறு கூறினார் . *" மகனே நீ ஒருநாளும் தனியாக இல்லை . தேவன் உன்னோடு கூட இருந்து உன்னை கவனித்து காப்பாற்றுகிறார் . "* இந்த அருமையான வார்த்தைகள் பால்பிராண்டை சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவுக்குள் வழி நடத்தின .
இவரது தாயே இவருக்கு முதல் ஆசிரியர் .
தனது பெற்றோருக்கு சிறு பருவம் முதலே கீழ்ப்படிந்து நடந்த இவர் , அவர்களுடன் ஊழியங்களுக்குச் செல்வதில் மிகுந்த வாஞ்சையுடன் செயல்பட்டார் .
ஆண்டவரின் , பெரிதான கிருபையினால் லண்டன் சென்று கல்வி கற்றார் .
மருத்துவப் படிப்பு முடித்து அறுவை சிகிச்சைத் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார் .
இந்நிலையில் இந்திய நாட்டில் தொழுநோயாளிகளாகக் காணப்பட்ட மக்கள்மேல் கனிவு கொண்டு தனது மனைவியுடன் தொழுநோயாளிகளின் துயர் துடைக்கவும் , அவர்களைக் குணப்படுத்தவும் தமிழ்நாட்டிற்கு வந்தார் .
அதனைதலைநிமிரச் செய்தார் .
தமிழ்நாட்டில் தொழுநோயாளிகள் மத்தியில் பணிகளினாலும் , புதுமைகளினாலும் உலக அளவில் தொழுநோயாளிகளின் சிகிச்சையில் உண்மையான முன்னேற்றத்தைக் கொடுத்தார் .
ஆழமான விசுவாசமும் அர்ப்பணிப்பும் கொண்ட இவர் , சிறந்த புத்தகங்கள் எழுதியதோடு பல விருதுகளையும் பெற்றார் .
உலக லெப்ரசி மிஷனின் தலைவராகப் பணியாற்றி தொழுநோயாளிகளின் நலனுக்காகவே உழைத்த பால்பிராண்ட் , சரித்திரம் - பேசும் சாதனையாளராவார் .
No comments:
Post a Comment