புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ரேனியஸின் இரண்டாவது (1817) மற்றும் மூன்றாவது நற்செய்திப் பயணம்

ரேனியஸின் இரண்டாவது (1817) மற்றும் மூன்றாவது நற்செய்திப் பயணம்* - (1818-1819)
வாசகர்கள் எண்ணப்பட்ட ஊழியர்களை ( Readers ) அனுப்பி , தகுந்த ஆயத்தம் செய்து வடதில்லை கன்னிப்புதூர் பெரிய பாளையம் அக்கரைப் பாக்கம் முதலிய ஊர்களுக்குச் சென்று அங்கு தங்கி இரவும் பகலும் நற்செய்திகளை அறிவித்தார்.
இவ்ஊழிய காலங்களில் இவருக்கு உதவியாக C . M . S . சங்கத்தார் கூடுதலாக சில மிஷனெரிகளையும் அனுப்பினர்.
ஏற்கனவே சென்னையில் பணிசெய்து கொண்டிருந்த இராணுவ குரு தாம்சன் S . P . C . K சங்கத்தார் அனுப்பி , இராயபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கனம் P . ராட்லர் - தியோக்கர் ஷ்மிட் , பெர்னாட்ஷ்மிட் என்ற மிஷனெரிகளும் வந்து சேர்ந்தனர்.
1818 ல் கனம் G . T பேரன்புருக் ( இவர் சுரண்டை மிஷனெரி T . G பேரன்புருக் அவர்கள் தந்தை ) மற்றும் இருவரும் இப்பணிக்கு அதிகமே உதவியவர்கள்.
*மூன்றாம் மிஷனெரி பயணம் 1818 - 1819*
அக்காலத்தில் வட ஆற்காடு , தென் ஆற்காடு மாவட்டங்களில் சமணர்கள் பலர் வாழ்ந்தனர்.
எனவே அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க விரும்பிய மிஷனெரி வீரர் தொண்டர் ரேனியஸ் அப்பகுதிகளுக்கு தமது பிரயாணத்தை மேற்கொண்டார்.
ஆற்காடு , வேலூர் , சித்தூர் , ஆரணி , சித்தாம்பூர் , திருவள்ளுவர் , தேரூர் , செங்கல்பட்டு , வந்தவாசி , விராணமூர் - முதலிய ஊர்களுக்கு சென்று , தங்கியிருந்து , அவர்களுடன் நேரில் உரையாடி , தெருக்களில் நின்று நற்செய்தி அறிவித்து , துண்டு பிரதிகளை கொடுத்து பணியை நிறைவேற்றினார்.
சமணத் தலைவர்களுடன் உரையாடினார்.
*உண்மையாகவே சுவிசேஷகனுடைய பாதங்கள் அழகானவைகளே தேவ திட்டத்தை நிறைவேற்ற நடந்திடும் கால்கள் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் பாதம் அழகானவைகளே*
பாவிகளைத் தேடிவந்த கிறிஸ்துவைப் போல் - எல்லா ஜாதி மக்களிலும் - பிற்படுத்தப்பட்டோர் , சமணர் , பிராமணரையும் தேடிச்சென்ற ரேனியஸின் இப்பணியை சென்னைப் பகுதி மக்கள் மனதில் கொண்டுள்ளார்களா ?
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory