2அணா 1 அணா பாடல்புத்தகம் கிடைக்குமா பொட்டல்பட்டி சேத்தூரில்*
*1932 ஆம் ஆண்டு திருமண்டல நற்போதகத்தில் வெளியான செய்தி*
பொட்டல்பட்டி கனம் V . ஞானாபரணம் ஐயரவர்கள் கிறிஸ்து பரமாத்மாவின் ஜெனன கீத மஞ்சரி , கிறிஸ்து பரமாத்மாவின் பாடு , மரணம் , உயிர்த் தெழுதல் கீதமஞ்சரி , என இரண்டு சிறு பாட்டு புஸ்தகங்கள் அச்சடித் திருக்கிறார்கள்.
*அவைகளின் கிரயம்*
முறையே
2 அணா ,
1 அணா .
2 அணா ,
1 அணா .
இப் பாட்டுகள் அவர்களுடைய சொந்தமானதல்ல.
ஆனால் நம் நாட்டில் கிராம் சபைகளில் அதிகமாய் உபயோகப்பட்டு வரும் கையெழுத்துப் பிரதிகளிலும் , மற்றும் கீர்த்தனங்களிலுமிருந்து ஒன்று சேர்த்து புஸ்தக ரூபமாய் சமர்ப்பித் திருக்கின்றனர்.
இப்படிப்பட்ட முயற்சிக் குறைவால் இனிய ராகங்களும் நிறைந்த பொருள்களுமுள்ள பல கீர்த்தனங்கள் காலத்தினது கொடிய சூழ்ச்சிக்குட்பட்டு மறைந்துவிடுகின்றன.
கனம் ஞானபரணம் ஐயரவர்கள் அச்சிட்டிருக்கும் சிறிய புஸ்தகங்கள் சபைகட்குப் பேருதவியாயிருக்கும்.
மேலும் படித்த பாட்டுகளையே பாடுவதைவிட புதுப்பாட்டுகளைப் படிப்பதற்கும் உதவியாயிருக்கும்.
புஸ்தகம் வேண்டுபவர் , பொட்டல்பெட்டி , சேத்தூர் என்னும் விலாசத்துக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கண்ட புத்தகங்கள் கிடைக்குமா கிடைத்தால் சொல்லுங்கள்?
*மன்னா செல்வகுமார்*
No comments:
Post a Comment