புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி டேவிட் சீஸ்பெர்கர்

மிஷனரி டேவிட் சீஸ்பெர்கர் பிறந்த தினம்*
உழைப்பின் விளைச்சல் தான் வெற்றி.
முன்னேற்றமும் கூட முன்னேறி கொண்டிருக்கும் எவரிடமும் தொடர்ந்து கடமைகளும் , பொறுப்புகளும் கூடிக் கொண்டே இருக்கும்.
இவர்கள் தங்கள் கடமையிலேயே மிகவும் கருத்தாக இருப்பார்கள். உலகப் பிரகாரமாக மக்கள் முன்னேற துடிப்பதற்கு பல முயற்சிகளையும் , வாய்ப்புகளையும் உருவாக்கும்போது கிறிஸ்தவ பணி செய்யும் வீரர் இன்னும் அதிகமாக தன்னுடைய உழைப்பில் தீவிரம் காட்டுதல் மிகவும் அவசியமானது.
டேவிட் சீஸ்பெர்கர் , வாலிபப் பிராயத்தில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்.
இரட்சிக்கப்படாத மக்கள் உலகில் அதிகம் உண்டு என்று கேள்விப்பட்டவுடன் , அம்மக்களின் ஆன்மீக இரட்சிப்புக்காக தன்னையே அர்ப்பணம் செய்தார் . ஹாலந்தில் தன்னுடைய ஊழியத்தை உற்சாகமாக செய்த இவர் லண்டன் திரும்பினார்.
அங்கு சின்சென்டார்ப் பிரபுவை சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றார் . 1739ம் ஆண்டு , இருவரும் இணைந்து மொரேவியன் காலணிகளில் உள்ள ஜார்ஜியா பகுதிகளில் சுவிசேஷத்தை அறிவித்தனர்.
சுமார் 60 வருடங்கள் டெலவர் பகுதி இந்தியர்களிடம் பணியாற்றினார்.
அவர்கள் மொழியை மிகவும் கடினப்பட்டு படித்து , அவர்கள் மொழியிலேயே சுவிசேஷம் அறிவித்தார் . இவர் ஒற்றர் என சந்தேகிக்கப்பட்டு , அந்நாட்டு அரசாங்கத்தால் சிறையிலடைக்கப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட இவர் , புது உற்சாகத்தோடு கிறிஸ்துவின் திருத்தொண்டை இன்னும் வேகமாக செய்ய ஆரம்பித்தார்.
1600 மைல்களுக்கு மேல் நடந்தே சென்று சுவிசேஷப் பணி செய்தார் . இன்றைய காலக்கட்டங்களில் நடந்து ஊழியப் பணிகளை கிராமங்களில் செய்ய பலர் தயங்கும்போது , இவரின் வாழ்வு நாம் செய்துவரும் பணியை சிந்தித்து பார்க்கவும் , சீர்தூக்கி பார்க்கவும் அறைகூவல் தருகின்றது . இவர் அன்றாட வாழ்வு குறிப்புகளை எழுதும் பழக்கமுடையவர்.
ஆண்டவர் தன் வாழ்வில் செய்த மகத்தான காரியங்களை திட்டமும் , தெளிவுமாக எழுதினார் . இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் . அநேக புத்தகங்களையும் , இலக்கண புத்தகங்களையும் எழுதினார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory