புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜெஸி , ஆலிஸ் , ஏமி

தலைமேல் சுழன்ற கத்தி தலைப்பாகையையும் தொடாமல் கழன்றது*
சிங்களவரில் பலர் தீவிர பௌத்தர்கள் . ஒரு சமயம் ஒரு சிங்களப் பெண் கிறிஸ்தேசுவை ஏற்றுக்கொண்ட பொழுது , மூர்க்கவெறி கொண்ட ஒரு சிங்களவன் அம்மை யாரும் ஜெஸி , ஆலிஸ் என்ற இரு மிஷனெரி நண்பர்களு மிருந்த சிற்றிலுக்குள் புகுந்து விட்டான் . அவன் கையிலோ கசாப்புக் கடைக்காரன் கத்தி ! ஜெஸி , ஆலிஸ் , ஏமியும் முழந்தாளிட்டு ஜெபிக்க ஆரம்பித்தனர்.
ஜெபித்தனர் ஜெபித்தனர் , ஜெபித்துக்கொண்டேயிருந்தனர்.
இறுதியில் அம்மையார் கண் திறந்து பார்த்தபொழுது அந்த மனிதன் இவர்கள் தலைக்குமேல் கத்தியைச் சுழற்றிக்கொண்டிருந் . தான்.
மூவருமாக அவனை ஏறிட்டுப் பார்த்த பொழுது அவன் தான் தேவதூதர்கள் முன்னிலையில் நிற்பதாக உணர்ந் தானோ ? அவனுடைய மூர்க்கம் கழன்று கொண்டுவிட்டது.
சுழற்றிக்கொண்டிருந்த கத்தியுடன் வெளியேறினான்.
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும் மூர்க்க னுடைய கத்திக்கும் தப்புவிப்பார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory