டோனாவூர் உபதேசியாரும் மாம்பழச்சங்கமும்
1833 ஆம் ஆண்டு காலரா நோயினால் மக்கள் பலர் இறந்தனர் , குடும்பங்கள் பல் முற்றிலும் அழிந்தது . அநேகக் குடும்பங்களில் மனைவி , கணவன் , பிள்ளைகள் அநாதைகளாயினர் , டோனாவூரிலும் இச்சம்பவம் நடந்தது . அவ்வாண்டு டோனாவூரின் தலைமை உபதேசியாராக இருந்தவர் இரத்தினம் என்னும் உபதேசியார்.
இவர் சபை வளர்ச்சிக்கான செயல்களை மிகவும் தீர்க்கமாகச் செயல்படுத்துபவர் ; மக்கள் மீது அதிகக்கரினையுடையவர் , இவர் காலராவால் உறவினர்களை இழந்தவர்களுக்கு ஏதாகிலும் உதவ வேண்டுமென்று எண்ணினார். *சமய சகாய நிதி ( Friend in Inced Sangam ) என்ற ஒரு சங்கம் அமைத்து அதன் மூலம் ஏழை விதவைகளின் பராமரிப்புக்காக ஒரு நிதி சேர்த்து உதவ வேண்டும் என்ற தனது எண்ணத்தை ரேனியசிடம் தெரிவித்தார்.*
இது 1833ம் ஆண்டிலேயே ரேனியசின் ஒப்புதலோடு போனாவூர் சேகரத்திலுள்ள அனைத்துச் சபைகளிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டது , பின்னர் இதன் முக்கியத்துவம் பிற சேகரங்களிலும் அறியப்பட்டு 9 . 7 . 1834 . முதல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலுமுள்ள அனைத்துச் சபைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் 1838 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருநெல்வேலி திருச்சபை *“ மாம்பழச்சங்கம் ”* என்ற பெயரில் வருடாந்திர பண்டிகையாக இதை நடத்துகிறது.
இவ்விழாவில் சேகரிக்கப்படும் திருச்சபையின் நிதி ஏழை விதவைகளின் பராமரிப்பிற்காகச் செலவிடப்படுகிறது , இந்தப்பண்டிகை நடை பெறும் காலம் மாம்பழம் அதிகமாக விற்கப்படும் காலமானதால் இப்பண்டிகையில் மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்காக வைக்கப்படும்.
இதனால் இப்பண்டிகை மாம்பழச்சங்கம் என்று பெயர் வந்தது என்ற புதிய வரலாறும் உண்டு.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment