புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி டைட்ரிச் போன்ஹோபர்

மிஷனரி டைட்ரிச் போன்ஹோபர் நினைவு தினம்* ஏப்ரல் 09
தீய சக்திகளை தகர்த்தெறியுங்கள் ஹிட்லரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
வரலாற்றுப் பாட புத்தகத்தில் படித்திருக்கக் கூடும்.
கொடுங்கோலன் இவன் . ஒரே சமயத்தில் , 6 , 00 , 000 யூதர்களை ஈவு , இரக்கமின்றி கொன்று குவித்தவன் , நாசிச கொள்கைகளை வலியுறுத்தி , மக்களை நாசம் செய்தவன் . டைட்ரிச் போன்ஹோபர் , ஹிட்லர் அரசாண்ட ஜெர்மனி தேசத்தில் , பிரஸ்லூ என்னும் நகரில் பிறந்தவர்.
சிறு வயதிலேயே போதகராக வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது . ஆயினும் , ஆண் ட வர் அழைத்தாலன்றி இப்பணிக்கு செல்லக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தார் .
ஆண்டவரின் அழைப்பை உணர்ந்த இவர் , பெற்றோரின் உதவியால் , இறையியல் படிப்பை தொடர்ந்தார் . பின்னர் , முதுநிலைப் பட்டமும் பெற்றார் . தாம் படித்த கல்லூரியிலேயே ஆசிரியரானார்.
அப்பொழுது பரவி வந்த நாசிச கொள்கைகளைக் குறித்து , ஆழமாக சிந்தித்தார் . மக்களை தவறாக வழிநடத்தும் இப்போதனைகளை முறியடிக்க வீரம் கொண்டார்.
நியோமுல்லர் , மார்க்ஸ் என்பவர்களுடன் இணைந்து அக்கொள்கைகளை எதிர்த்தார்.
1933ம் வருடத்திலிருந்து 1935ம் வருடம் வரை இலண்டனில் ஜெர்மன் மொழி சபைகளின் போதகராக செயல்பட்ட இவர் , தன் தாய் நாடாகிய ஜெர்மனி திரும்பினார்.
பல புத்தகங்களை எழுதி , மக்களை விழிப்புணர்வின் பாதையிலே வழி நடத்தினார் . இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது . ஹிட்லரின் சதிகளை முறியடிக்க , மக்களை திரட்டினார் .
இதனால் , இவர் பெருந்துன்பத்துக்கு உள்ளானார் . மறைவாக தங்கியிருந்து கிறிஸ்துவின் தொண்டர்களை பெலப்படுத்தினார்.
எனினும் , இவர் தங்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது .
1943ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் , கிறிஸ்துவுக்குள் தன் கொள்கைகளை வலியுறுத்தியதை விரும்பாத அதிகாரிகள் 1945ம் ஆண்டு *இதே நாளில் இவரைத் தூக்கிலிட்டனர்.*
எனினும் , இவர் பற்ற வைத்த சிந்தனைகள் இன்றும் எரிந்து கொண்டிருக்கின்றன.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory