புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி ராக்லாந்து

கனம் மிஷனரி ராக்லாந்து பிறந்த தினம்*
இயேசுவிற்காக . . . அது ஓர் கிராமம்.
இயேசுவைப் பற்றி அறியாதவர்கள்.
அறி ய வு ம் வி ரு ம் பாத வர் க ள் . மூ டப் பழக்க வழக்கங்களுக்குள் மூழ்கி கிடந்தவர்கள்.
இந் தி ய ரி ன் இ ழி வு நி லை ைய ம ா ற் ற இங்கிலாந்திலிருந்து வந்தார் ராக்லாண்ட்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் , ஆயராகவும் , கேம்ப்ரிட்ஜ் கல்லூரியின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றியவர்.
வ ட தி ரு நெல் வே லி யி ல் அமைந்திருந்த கிராமங்களுக்கு நற்செய்தியைப் பறைசாற்ற உள்ளே நுழைந்தார்.
நுழைந்தது தான் தாமதம் . கற்களும் , தூசிகளும் அவரை நோக்கி வீசப்பட்டன.
பிராமணன் ஒருவன் தடியால் தலையில் அடித்தான் , இடம் விட்டு நகரும் முன்னே சரமாரியாக அடிகள் விழுந்தன.
நடக்கக் கூட தெரியாத சிறு பையனும் கூடகல்லைத் தூக்கி எறிந்ததுதான் பரிதாபம்.
எதிர்ப்புகளைக் கண்டு பழகிப்போன ராக்லாண்ட் , அவர்களையும் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார். பல ஆலயங்கள் சிவகாசி மற்றும் சுற்றுப்புறங்களில் கட்டப்பட்டன. மழை , வெயில் , பசி , அவமானப் பேச்சுக்கள் , சரீர துன்பங்கள் எதையும் பொருட்படுத்தாது தன் ஊழியப் பணியைத் தொடர்ந்தார்.
*அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் பழக்கமுடையவர்.* அதிகாலை 4 மணிக்கே ஊழியத்திற்கு சென்று விடுவார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுவிசேஷத்தை அறிவித்த சுவிசேஷச் செம்மல்.
பசியின் களைப்பினால் *தொப்பியில் கூழ் வாங்கிக் குடித்து விட்டு* மீண்டும் அலைந்து நற்செய்தி அறிவித்தவர்.
ஓயாத அலைச்சலினால் அவர் உடல் நலிந்தது . காச நோய் அவரைத் தாக்கியது. இரத்த வாந்தி எடுத்தார் . விக்கிரக வணக்கத்தாரை இயேசுவின் பாதையில் நடத்தியராக்லாண்ட் தமது 44வது வயதில் மரணத்தைத் தழுவினார்.
நற்செய்தி செம்மலாக வாழ்ந்து காட்டியராக்லாந்தின் பிறந்தநாள் இன்று
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory