பேராயர் சாலமோன் துரைசாமி நினைவு தினம்
மே 22
பிஷப் ஹீபர் கல்லூரி . 1934 ஆம் ஆண்டு பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டது.
சைமன் கமிஷன் பரிந்துரைப்படி அ து மூடப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலையில் இடி விழந்தாற் போல் தடுமாறிநின்றனர்.
1964ம் ஆண்டு திருச்சி - தஞ்சை திருமண்டலப் பேராயராகப் பொறுப்பேற்ற சாலமோன் துரைசாமி , அக்கல்லூரியை மீண்டும் தழைக்கச் செய்தார்.
புத்துயிரும் , புதுவாழ்வும் அக்கல்லூரிக்குக் கிடைத்தது . இருபது ஏக்கருக்கும் அதிகமான கட்டிடங்கள் கட்டப்பட்டன.
கண்டோர் வியந்து போற்றும் வகையில் அதனை உருவாக்கி , படிப்போரைப் பெருமையடையச் செய்தார் பேராயர் துரைசாமி . மக்களின் ஆன்மீக வாழ்விலும் , பொருளாதார வளர்ச்சியிலும் , கல்விப்பணியிலும் அக்கறை கொண்டு தமது செயற் திட்டங்களுக்கு சிறப்பான வடிவம் கொடுத்தார் . திருச்சபை தன்னிறைவு பெற்றுக் காணப்பட வேண்டும் என்பதற்காகப் பல வணிக வளாகங்களை உருவாக்கினார்.
மேற்கு ஜெர்மனியின் உதவியுடன் ஏழைச் சிறுவர் சிறுமியர் இலவசமாகத் தங்கிப் பயில நாற்பதுக்கும் மேற்பட்ட விடுதிகளை ஏற்படுத்தினார் . கல்விப் பணியில் பெரும் முன்னேற்றங்களை மக்கள் பெற்றிடச் செய்தார்.
பேராயர் துரைசாமி , தமிழ் கிறிஸ்தவ இலக்கியங்கள் மீது நீங்காப் பற்றுடையவர்.
1981ஆம் ஆண்டு *உலகக் கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை* என்ற அமைப்பைத் தொடங்கித் திறம்பட நடத்தினார்.
பேராயர் ஒரு சிறந்த எழுத்தாளர் . கிறிஸ்தவக் கல்வி , இந்தியாவில் கிறிஸ்தவம் , *என் கண்கள் அவரது மகிமையைக் கண்டன* போன்ற அழியா நூல்களைப் படைத்தார்.
மாபெரும் தலைவனாக வாழ்ந்த பேராயர் இதே நாள் மே 22 , 1992ஆம் ஆண்டு கடவுளின் அழைப்பை ஏற்று , பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் விதைக்கப்பட்டார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment