இந்த வருஷமுமிருக்கட்டும்
கரிசலில் 1827 ம் ஆண்டில் ஆறு குடும்பங்களடங்கிய ஒரு சிறு சபை தோன்றிற்று.
துவக்கத்தில் இந்துக்களாலும் முகமதியராலும் அச்சிறுசபைக்குண்டாயிரந்த துன்பம் கொஞ்சநஞ்சமல்ல.
ஆயினும், அக்கிறிஸ்தவர்கள் தாளவிழாமல் உறுதியாக நின்று , விசுவாசத்தைக் காத்துக்கொண்டார்கள் . அவர்களது விசுவாச உறுதியின் பயனாக திருச்சபையும் கொஞ்ச கொஞ்சமாகப் பெருக ஆரம்பித்தது. நெடுநாளையத் துன்பமும் ஓய்ந்தது.
துன்பங்கள் நீங்கினபின் , அக்கிறிஸ்தவ மக்கள் அனல் அற்றவர்களாகஅரம்பித்தார்கள் , உலகசிந்தை மேலிட்டது அஜாக்ரிரதை அசிரத்தை , அசட்டை முதலியன கூடவே தோன்றி வளர்ந்தன.
மிஷனெரிமாரும் , ஊழியரும் அச்சபையைக் - வித்துக் கவலை கொள்ளலானார்கள்.
1836 முதல் டோவூைர் மிஷனெரி E . டென்ற் ஐயர் E. Dent அச்சபையின் மேற்பார்வையாளரானார்.
அவர் , தன் கையின் கீழிருந்த உபதேசிமாரில் சிறந்த பக்தனும் திறமைசாலியுமான ஒரு உபதேசிகரை அவ்வூரில் நியமித்து நல்ல பலன் கிடைக்குமென்று கருதி அவ்வாறே செய்தார்.
அவ்வுபதேசியாரும் ஜெபத்துடன் தன் பணிவிடையை ஆரம்பித்து , உபதேசத்தினாலும் *முன்மாதிரியினாலும்* அம் மக்களைச் சீர்ப்படுத்த தன்னாலான மட்டும் முயன்று பார்த்தார் பயனில்லை ! மாறாக , முன்னிலும் அதிகமாக கட்சிளும் , பிரிவினைகளும் , சண்டைகளும் , இந்துக் கிரியையைகளுமே சபையில் காணப்பட்டன.
1838 ம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒருநாள் டென்ற் ஜயர் கரிசலுக்கு சென்று , சபைவிசாரணை செய்து , அங்குக் காணப்பட்ட நிலைமைக்காக மிகவும் வருந்தி , மனவேதனையுடன் ஒரு பயங்கர முடிவெடுத்தவராய் , உபதேசிகரை அழைத்து சகோதரனே இச்சபையில் நாம் செய்யும் பணிவிடை பயனற்றது. இனி இச்சபையைக் கையைவிட்டுக் கழுவ வேண்டியது தான். இதன் பெயரை சபைப்பட்டியலிருந்து நீக்கிவிடுகிறேன் , உம்மை வேறோரிடத்துக்கு மாற்றுகிறேன் என்றார் ,
உபதேசியாரோ மறுமொழி யொன்றும் சொல்லாமல் ஐயருடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார் , அவருடைய கண்கள் தன்ணீரால் நிறைந்தன , துக்கம் தொண்டையையடைத்தது , பேச நாவெரவில்லை எனினும் , கஷ்டத்துடன், விம்மல்களுக்கிடையில் ஐயா , கொஞ்சம் பொறுத்துப்பாருங்கள், என்றார்.
அதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை.
கன்னங்களில் கண்ணீர் ஆறாய் ஓடிற்று. டென்ற் " ஐயர் ஒன்றும் பேசாமல் தன் குதிரையின் மீது தாவியேறிக் , கோபத்துடன் போய் விட்டார்.
உபதேசியார் . உடனே, ஜெபாலயத்துக்குட் சென்று முழங்காலில் நின்று அழுது ஜெபித்தார் , கர்த்தர் அதைக்கேட்டார். பலன் ? பதினாறே மாதங்கள் தான் , அதற்குள் *கரிசலில்* ஒரு எழுப்புதல்.
அதன்விளைவாக 1840 க்குள் அக்கிராமத்தார் அனைவரும் , கிறிஸ்தவர்களாகி சபையில் சேர்ந்தனர்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
------------------------------------------------------------
No comments:
Post a Comment