நல்மிட்பர் பட்சம் நில்லும் பாடல் வரலாறு
{ பாமாலை 249 }
{ பாமாலை 249 }
பிலடெல்பியா என்பது அமெரிக்காவிலுள்ள ஒரு பட்டனம் ஆலயத்தில் மகிமை விளங்கும் ஆலயம் ( Episcopal church ) என்றொரு ஆலயம் உண்டு.
அந்த ஆலயத்தில் உடலிடையிங் ( Rev . Dudley ' Tyngs ) என்றொரு குருவானவர் வந்தார் , சுமார் 100 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் பெருங்குழப்பம் அன்கொன்டிருந்தது.
ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் பெரிய பெரிய பண்ணைகளை பயன்படுத்தி , அப்பண்ணைகளில் உழைக்கக்கூடிய கூலியாட்கள் அடிமையாயிருந்தது. இதற்கு ஒருவழி கண்டுபிடித்தனர்.
ஆப்பரிக்காவிலுள்ள பூர்வீகக் குடிமக்களாகிய நீக்ரோக்களை , மிருகங்களை வேட்டையாடுவது போல் வேட்டையாடிப் பிடித்து , அவர்களை இந்த அமெரிக்கப் பண்ணையார்களுக்கு விற்று வந்தனர்.
இவ்வடிமைகளை வாங்கின பண்ணையார்கள் , சம்பாதிப்பதையே தங்கள் ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தபடியால் இவ்வடிமைகளிடத்தில் கடுமையாக வேலை வாங்கினர் . மிருகங்களை அடிப்பது போல் அடித்து வேலை வாங்கினர் .ஆனால் கூலி கொடுப்பது இல்லை .
எந்த விதமான வசதி செய்து கொடுப்பது மில்லை . இந்த அடிமை வியாபாரத்தினால் அடிமைகளை வாங்கினவர்களும் கொள்ளை இலாபம் சம்பாதித்தனர் , இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பிலடெல்பியாவிலுள்ள மகிமை விளங்கும் ஆலயத்தில் போதகர் ட்டலிடையிங் திருப்பணி விடை செய்து கொண்டிருந்தார் .
இவர் அடிமை வியாபாரத்தைக் கண்டித்தார் .
மனிதனை மனிதன் அடிமையாக்குவது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முற்றிலும் விரோதமானது .
அமெரிக்காவிலுள்ள வெள்ளையர்களுக்காக மட்டுமல்ல , இந்த நீக்ரோ அடிமைகளுக்காகவும் கிறிஸ்து மரித்தார் அல்லவா ? அடிமைகளைப் பிடித்து அடிமை வியாபாரம் செய்த வெள்ளையர்களுக்காக மட்டுமல்ல , மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்ட நீக்ரோக்களுக்காகவும் கிறிஸ்து மரித்தார் அல்லவா ? அடிமைகளைப் பிடித்து அடிமை வியாபாரம் செய்த வெள்ளையர்களுக்காக மட்டுமல்ல . மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்ட நீக்ரோக்களுக்காகவும் கிறிஸ்து மரித்தார் . அல்லவா ? ஆகையால் இந்த வெள்ளையர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்க்கை நடத்துகிறார்களோ அவ்வளவு சுதந்திரமாக நீக்ரோக்களும் வாழ்க்கை நடத்த அவர்களுக்கு உரிமை உண்டுல்லவா ? இவை போன்ற கருத்துக்களைத் தமது பிரசங்கத்தில் கூறி வந்தார் பாதிரியார் டட்லி . இப்படிப்பட்ட பிரசங்கங்களைக் கேட்ட அடிமை வியாபாரிகளும் , பண்ணையார்களும் சும்மாயிருப்பார்களா ? பாதிரியாரிடம் சென்று இப்படிப்பட்ட பிரசங்கங்கள் செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
பாதிரியார்கேட்கவில்லை . பாதிரியாரை அதட்டினர் . கண்டித்தனர் . பயமுறுத்தினர் . பாதிரியார் அசையவில்லை .
உங்கள் அடிமை வியாபாரம் கிறிஸ்துவின் அன்புப் பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது . அதை நான் எடுத்துக் கூறாமலிருக்க முடியுமா என்று தீர்மானமாகக் கூறி விட்டார் பாதிரியார் .
பணக்காரக் கும்பல் சதி செய்து அவரை வேலையிலிருந்து நீகி விட்டனர் .
ஆலயத்திலுள்ள பிரசங்கபீடம் போய் விட்டதே என்று அவர் தமது பிரசங்கத்தை நிறுத்தி விட வில்லை .
திறந்த வெளியிலிருந்து பிரசங்கித்தார் .
ஏராளமான பேர் அவர் பிரகங்கத்தைக் கேட்பதற்காகக் கூடி வந்தனர் .
திடீரென்று இவருக்கு எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது .
ஒரு இயந்திரத்தில் இவருடைய கை அகப்பட்டு அது துண்டிக்கப் பட்டு போய் விட்டது . ஆபத்தான நிலைமையிலிருந்தார் . மரணம் நெருங்கி கொண்டிருந்தது . ஞாயிற்றுக் கிழமை வந்தது .
கோயில் மணிச்சத்தம் கெட்டது .
சபையார் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தனர் . பாதிரியாரோ பொன்னகர் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் .
சபையாருக்கு நீங்கள் கடைசியாகச் சொல்ல விரும்பும் செய்தியுண்டா என்று அவருடைய நண்பர்கள் அவரை கேட்டார்கள் .
கிறிஸ்துவுக்காகப் போர் புரிவதற்கு ஆயத்தமாயிருக்கும்படி அவர்களைக் கேட்டு கொள்ளுங்கள் .
Tell them to Stand up of Jesus .
இதுவே என்னுடைய இறுதிச் செய்தி என்று கூறினார் .
இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர் His friend and fellow preacher , Dr . George Duffield , was touched by the words and Wrote the hymn Stand Up , Stand Up for Jesus , Dufieldt ( concludied his Serimon the following Sunday by reading the lyrics as a tribute to his friend.
கடைசி வார்தைதைகள் தொட்டு விட்டன .
உடனே பாதிரியாரின் கருத்தைக் கொண்ட ஒரு பாட்டை Stand up for Jesus என்ற பாதிரியாரின் வார்ததைகளைக் கொண்டே ஆரம்பித்து எழுதி விட்டார் .
வாழ்க்கை முழுவதிலும் கிறிஸ்துவுக்காவும் , அவருடைய சுத்த சுவிசேஷத்திற்காகவும் போர் புரிந்த வீரனின் அற்பனிப்பாக இந்தப் பாட்டு எழுதப்பட்டது .
வீரர்களாயிருக்கப்பட்ட எல்லோரும் போருக்கு வாருங்கள் .
இயேசுவின் சேனைக்குக் கோழைகள் தெவையில்லை .
வீரர்கள் எல்லோரும் திரண்டு வாருங்கள் அருமையான பாட்டு .
Ye that are men , now Serve him
Against unrumbered foes
Let Courage rise with danger ,
And strength to strengtli oppose.
Against unrumbered foes
Let Courage rise with danger ,
And strength to strengtli oppose.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது.
No comments:
Post a Comment