*நாலுமாவடி பரி . யோவான் ஆலயம்.*
1842ம் வருஷம் நாலுமாவடி சபையார் ஓர் ஆலயத்தைக் கட்டி , அவ்வருடம் டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று பிரதிஷ்டை செய்தனர்.
பின்பு சபையார் தங்களுக்கு ஓர் பெரிய ஆலயம் தேவை என்று கண்டு புதிய ஆலயம் கட்டத் தீர்மானித்தனர்.
ஸ்பராட் ஐயர் இது கேட்டு மகிழ்ச்சியுற்றுப் , பிளான் தயாரித்து சுமார் 600 ஜனங்கள் செளகரியமாய் அமர்ந்து தேவனை ஆராதிக்கக்கூடிய 65 அடி நீளமும் , 30 அடி அகலமும் கொண்டதாய் காதிக் முறையில் அமைந்த இவ்வாலயத்தை க ட் டி முடித்து 1860 செப்டெம்பர் 22ல் பிர திஷ்டையும் செய் தார் .
அவ்வாலயம் இப்போதும் தேவ நாமத்திற்கு மகிமை யாக ஊரின் மத்தியில் கம்பீரமாய் நிற்கிறது . கேமரர் ஐயர் காலை ஆராதனை செய்து முடித்தார்.
கனம் V . J . டேர் ஐயரவர்களும் , அவர்கள் மூத்த குமாரரும் அங்கு வெகு காலம் ஊழியம் நடத்தியதால் அவர்கள் ஞாபகார்த்தமாக அவர்கள் பிள்ளைகளின் பலர் உதவி யினால் கிராதித் தளம் புதுப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment