ஆழ்வாநேரி பரி . பவுலின் ஆலயம் .
1829 - ம் வருடம் செப்டம்பர் 27 - ம் தேதி ஆராதனை நடத்த ஒரு பந்தல் போடப்பட்டது .
1839 - ம் வருஷம் மே மாதம் 12 - ம் தேதி முதல் முதலாக நற்கருணை பரிமாறப்பட்ட பொழுது தங்கட்கென ஒரு ஆலயம் கட்ட வேண்டுமென சபையார் ஒரு திட்டம் வகுத்தார்கள் .
பெட்டிட் ஐயரவர்கள் தான் ரூ . 200 கொடுப்பதாக வாக் குறுதி அளித்தார்கள் . சபையார் தங்களால் கொடுக்கக் கூடியதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து ஆலயக் கட்டு மான நிதி சேர்த்தார்கள் .
ஆகவே 1846 - ம் வருடம் அக்டோபர் மாதம் 21 - ம் தேதி ஆலயம் கட்டிமுடிக் கப்பட்டுப் பிரதிஷ்டையானது .
இந்த கிறிஸ்தவ சபையிலும் ; இந்த சர்க்கிளைச் சேர்ந்த மதுரகுளம் , கோவைகுளம் , முதலிய இடங்களிலுள்ள கிறிஸ்தவ மக்களும் கடவுள் கிருபையால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாய் மலேயா நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment