புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தாமஸ் மூர்

சரித்திரத்தில் இடம் பிடித்தவர்கள்

தாமஸ் மூர் நினைவு தினம்

எட்டாம் ஹென்றி இங்கிலாந்தை ஆட்சி செய்த காலம் அது.

திருச்சபையின் சட்டதிட்டங்களில் அரசு அதிகமாகத் தலையிட்டது.

குருக்கள் தங்கள் பணிகளைச் சரிவர கவனிக்க முடியவில்லை.

தாமஸ் மூர் நேர்மையானவர் .

தந்தை ஒரு நீதிபதியானதால் மூர் சகல ஒழுக்கங்களிலும் முறைப்படி வளர்க்கப்பட்டார் .

ஆழ்ந்த இறை பக்தி உள்ளவராகவே வளர்ந்தார் . கர்த்தூசியன் என்ற மடத்தில் இணைந்து நான்கு ஆண்டுகள் வேத நூல்களை தெளிவாகப் படித்தார் .

தேவ அழைத்தலை உணர்ந்து கொண்ட பின்னர் திருப்பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார் . பொது வாழ்விலும் பல உயர்வுகளைப் பெற்றார் .

எட்டாம் ஹென்றி மன்னரின் நண்பராகவும் திகழ்ந்தார் . பக்தியில் நாளுக்கு நாள் சிறந்தோங்கி வளர்ந்தார் . நாள்தோறும் நான்கு முதல் ஐந்து மணி நேரமே தூங்குவார் . பிற நேரங்களை வேதம் வாசிப்பதிலும் , ஜெபிப்பதிலுமே செலவிட்டார் .

தாமஸ் மூர் தனக்கென்று பணம் சேமித்ததில்லை .

ஏழைகளுக்கும் , நோயாளிகளுக்கும் தாராளமாக உதவி செய்தார் .

எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவார் .

நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர் . எட்டாம் ஹென்றி அரசன் தம் முதல் மனைவியைத் தள்ளிவிட்டு வேறே திருமணம் செய்யப் போகும் அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டது .

மேலும் தானே திருச்சபையின் தலைவர் என்றும் அறிவித்தார் . எனவே , திருச்சபை சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட அரசனை தாமஸ் மூர் வெளிப்படையாகவே எதிர்த்தார் .

அரசாங்கத்தில் தான் வகித்து வந்த பதவியிலிருந்தும் விலகினார் . இதனால் ஆத்திரம் அடைந்த அரசன் , இவரைச் சிறையிலடைத்தான் .

15 மாத சிறைவாசத்திற்குப் பின்னும் அரசனின் விருப்பத்திற்கு ஒத்துழைக்காததால் இதே மாதம் 7ஆம் தேதி 1535ஆம் ஆண்டு தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார் .

-

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory