*வெங்கலப்பொட்டல் ஊரும் பேரும்*
சங்கரன்கோயில் ரோட்டில் *' ரஸ்தா '* என்ற பேருந்து இறக்கத்திற்குக் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள கிராமம் வெங்கலப்பொட்டல்.
ஊருக்குத் தெற்கே *' ஊருணி '* எனப்படும் குடிநீர் குளம் தோண்டி இருக்கிறார்கள் .
தோண்டும் போது வெங்கலத் தேர் ஒன்று கிளம்பி இருக்கிறது .
அது மிகவும் பிரகாசமாக இருந்ததாம் .
யாவரும் பயந்து விழுந்தடித்து ஊருக்குள் ஓடி விளம்பி இருக்கிறார் கள் .
மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் ஊரே திரண்டு வந்திருக்கிறது .
வந்து பார்த்தால் வெங்கலத் தேர் பூமிக்குள் புதைந்து விட்டது . முடிந்த வரை தோண்டிப் பார்த்திருக்கிறார்கள் . கண்டு பிடிக்க முடியவில்லை .
அந்த இடம் ஒரே பொட்டலாயிற்று .
எனவே சிதம்பரபுரம் என்றிருந்த ஊர் வெங்கலப்பொட்டல் என்றாயிற்று .
நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் காலத்தில் உருவான சபை ( 1820 - 1838 ) அப்பொழுது ஒரு கூரைக் கோயில் இருந்தது .
1928 இல் ஓலைக்கோயில் ஓட்டுக்கோயிலானது .
1979 இல் முதல் தட்டு கோபுரமும் , 1994 இல் இரண்டாம் தட்டு கோபுரமும் கட்டப்பட்டது .
*செவிவழிச் செய்தி இது*
ஊரும் பேரும் வரலாற்று சம்பவம்
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment