புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சாராள் டக்கர்

ஆத்தும அறுவடை வீரர் சாராள் டக்கர்
சேவை செய்வதற்கு ஊனம் ஒரு தடையேயில்லை , மனமிருந்தால் மார்க்கம் உண்டு ' என்பார்கள் . ஆம் .
நமது நல்ல எண்ணங்களும் , நல்ல செயல்களுமே பிறர் வாழ்வை உயர்த்தும் உன்னத கருவிகளாகும் .
1887ஆம் ஆண்டு ஜான் டக்கர் என்ற மிஷனெரி பாளையங்கோட்டையில் பணிபுரிந்து கொண்டிருந்தார் .
இவர் ஆத்தும் அறுவடை வீரர் .
தன் சொல் , செயல் அனைத்திலும் இயேசுவைப் பிறருக்குக் காண்பித்து , மக்களைநற்செய்தியின் பாதையில் நலமாக வழிநடத்திக் கொண்டிருந்தார் .
இவருக்கு ஒரு சகோதரி . பெயர் சாராள் டக்கர் . கால் ஊனமுற்றவர் . கால் ஊனமே தவிர , மனம் ஊனமில்லை . - இவரைச் சுற்றிலும் எப்பொழுதுமே தோழிகள் பட்டாளம் நிறைந்திருக்கும் .
ஏனெனில் இவர் அன்புடன் பேசும் வார்த்தைகளை அவர்கள் தம்மை மறந்து கேட்டுக் கொண்டிருப்பர் .
தேன் சொட்டும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இவர் .
கருணையே நிறைந்தவர் . ஒருநாள் ஜான் டக்கர் தன் சகோதரிக்கு ஒரு கடிதம் எழுதினார் .
அக்கடிதத்தில் , " தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வியறிவு இல்லாமல் நாயிலும் , பேயிலும் மிகவும் இழிவாக நடத்தப்படுகிறார்கள் . அவர்களின் அவல நிலையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை " என்று குறிப்பிட்டிருந்தார் .
சாராள் டக்கர் இக்கடிதத்தைத் தன் தோழிகளுக்கு வாசித்துக் காட்டினார் .
தோழிகள் அனைவரும் சாராளின் தீர்மானத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் .
அனைவரும் முழங்காற்படியிட்டனர் .
தமிழ்நாட்டுப் பெண்களின் நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்தனர் .
தங்கள் வருமானத்தின் பகுதியை இம்மக்களின் நலனுக்காக செலவிட தீர்மானித்தனர் .
இவர்கள் தீர்மானத்தில் பேரிடி விழுந்தது .
அந்தோ ! அவ்வருடமே சாராள் டக்கர் இவ்வுலகம் விட்டுவிண்ணகம் சென்றார் .
சிநேகிதிகள் கூடினர் . அழுவதற்குப் பதில் ஆர்வம் கொண்டனர் .
268 பவுன் 17 சில்லிங் பணம் சேர்ந்தது .
ஜான் டக்கர் ஐயருக்கு அனுப்பி வைக்கப்பட்டது . “ சாராள் டக்கர் ஸ்தாபனம் உருவானது .
இன்றும் திருநெல்வேலியில் அநேக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் , ஆசிரியர் பயிற்சிப்பள்ளி இதனால் உருவானது .
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory