இராதாபுரம் சேகர ஆரம்பம்
1864ல் எல்லை உடன்பாடுக்கு உட்பட்டு கூடன்குளம் , யாக்கோபுரம் , வடக்கன்குளம் போன்ற 6 கிராமச் சபைகளை நாகர்கோவிலுள்ள லண்டன் மிஷனெரி சங்கம் ( LMS ) இடையன்குடி சேகரத்திற்கு விட்டுக் கொடுத்தது .
கால்ட்வெல் இக்கிராமங்களுக்கு அடிக்கடி சென்று நற்செய்தியை அறிவித்தார் .
நல்ல நிலத்தில் விதைத்த விதைகள் 30 , 60 மற்றும் நூறாக அறுவடை தருவது போல , கால்ட்வெலின் பணியை இறைவன் இயேசு மிகுதியாக ஆசீர்வதித்தார் .
ஒரு வருடத்திலேயே கூடன்குளத்தில் 100 பேரும் , பிற ஊர்களில் 22 , 32 மற்றும் 70 பேர் கிறிஸ்துவுடன் தங்களைப் புதிதாக இணைத்துக் கொண்டனர் . “ நான் இன்னும் இளமையும் உடல் நலனும் உள்ளவனாக இருந்திருந்தால் இடையன்குடியை வேறொருவர் பொறுப்பிலே விட்டு விட்டு , முழுமையாக இவ்விடங்களிலே பணிபுரிய வந்திருப்பேன் " என்று கால்ட்வெல் குறிப்பிட்டார் .
இந்தக் கிராமங்களைக் கால்ட்வெல் இராதாபுரம் சேகரத்தோடு இணைத்தார் ; தன்னால் பயிற்சி கொடுக்கப்பட்ட சாமுவேல் ஐயரை அவற்றைக் கவனித்துக் கொள்ளும் மிஷனெரியாக நியமித்தார் .
--------------------------------------------------
No comments:
Post a Comment