பஞ்சாப்பில் எழுப்புதல் எனும் தீயைப் பற்ற வைத்தவர் ஜாண் ஹைடு
1904ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ; சீயாஸ் கோட் நகரில் ஓர் மாபெரும் மாநாடு , இந்தியத் திருச்சபையின் செயல்பாட்டை உயர்த்தும் ஓர் மாநாடாகக் காணப்பட்டது .
ஜெப அப்போஸ்தலன் என்றழைக்கப்படும் ஜாண் ஹைடு அம்மாநாட்டில் ஆற்றிய அருளுரைகள் எழுப்புதல் தீயைப் பற்ற வைப்பதாக அமைந்தன .
பஞ்சாப் திருச்சபைகளுக்கு அது புத்துயிரைஅளித்தது .
ஜாண் ஹைடு கிறிஸ்தவ அன்பிலும் , பக்தியிலும் வளர்க்கப்பட்டவர் .
இறையியல் படிப்பை முடித்து ஆண்டவரின் சித்தம் செயல்பட தன் வாழ்வை அர்ப்பணித்தார் .
இந்திய நாட்டுக்கு சுவிசேஷம் அறிவிக்கக் கடவுளால் அழைக்கப்படுவதை உணர்ந்த அவர் 1892ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்துக்கு வந்தார் .
திட்டமிட்ட உழைப்பினாலும் , விடாப்பிடியான ஜெபத்தினாலும் , வளர்ச்சி குன்றிய திருச்சபையின் நிலையை மாற்றியமைத்தார் .
திருச்சபைகள் வளர்ந்து பெருகியது .
இவர் கண்ணீர் மல்க ஜெபிக்கும் பழக்கம் கொண்டவர் .
கிறிஸ்துவை அறியாத மக்களின் இரட்சிப்பிற்காகவும் , கிறிஸ்துவை அறிந்தவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கவும் உளக்கமாக ஜெபித்தார் .
ஆயிரக்கணக்கானோர் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றனர் .
சுவிசேஷம் அறிவிப்பதில் தீவிரமாய் செயல்பட்டார் .
எழுப்புதல் தீ பற்றியெரிந்தது .
தன்னை முழுமையுமாக இயேசுவுக்கு அர்ப்பணித்த இவர் , எதிர்பாராத புற்றுநோயால் தாக்கப்பட்டார் .
இளம் வயதிலேயே தன் ஓட்டத்தை முடித்து 1912ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகிமைக்குள் பிரவேசித்தார் .
இன்றைய இந்தியாவில் எழுப்புதல் என்னும் தீயைப் பற்ற வைக்க ஜான் ஹைடுவைப் போன்ற இளம் உள்ளங்கள் எழும்பினாலன்றி , இந்தியாவிற்கு விடிவுகாலம் தோன்றுவது எப்போது ?
No comments:
Post a Comment