புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜாண் ஹைடு

பஞ்சாப்பில் எழுப்புதல் எனும் தீயைப் பற்ற வைத்தவர் ஜாண் ஹைடு
1904ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ; சீயாஸ் கோட் நகரில் ஓர் மாபெரும் மாநாடு , இந்தியத் திருச்சபையின் செயல்பாட்டை உயர்த்தும் ஓர் மாநாடாகக் காணப்பட்டது .
ஜெப அப்போஸ்தலன் என்றழைக்கப்படும் ஜாண் ஹைடு அம்மாநாட்டில் ஆற்றிய அருளுரைகள் எழுப்புதல் தீயைப் பற்ற வைப்பதாக அமைந்தன .
பஞ்சாப் திருச்சபைகளுக்கு அது புத்துயிரைஅளித்தது .
ஜாண் ஹைடு கிறிஸ்தவ அன்பிலும் , பக்தியிலும் வளர்க்கப்பட்டவர் .
இறையியல் படிப்பை முடித்து ஆண்டவரின் சித்தம் செயல்பட தன் வாழ்வை அர்ப்பணித்தார் .
இந்திய நாட்டுக்கு சுவிசேஷம் அறிவிக்கக் கடவுளால் அழைக்கப்படுவதை உணர்ந்த அவர் 1892ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்துக்கு வந்தார் .
திட்டமிட்ட உழைப்பினாலும் , விடாப்பிடியான ஜெபத்தினாலும் , வளர்ச்சி குன்றிய திருச்சபையின் நிலையை மாற்றியமைத்தார் .
திருச்சபைகள் வளர்ந்து பெருகியது .
இவர் கண்ணீர் மல்க ஜெபிக்கும் பழக்கம் கொண்டவர் .
கிறிஸ்துவை அறியாத மக்களின் இரட்சிப்பிற்காகவும் , கிறிஸ்துவை அறிந்தவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கவும் உளக்கமாக ஜெபித்தார் .
ஆயிரக்கணக்கானோர் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றனர் .
சுவிசேஷம் அறிவிப்பதில் தீவிரமாய் செயல்பட்டார் .
எழுப்புதல் தீ பற்றியெரிந்தது .
தன்னை முழுமையுமாக இயேசுவுக்கு அர்ப்பணித்த இவர் , எதிர்பாராத புற்றுநோயால் தாக்கப்பட்டார் .
இளம் வயதிலேயே தன் ஓட்டத்தை முடித்து 1912ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகிமைக்குள் பிரவேசித்தார் .
இன்றைய இந்தியாவில் எழுப்புதல் என்னும் தீயைப் பற்ற வைக்க ஜான் ஹைடுவைப் போன்ற இளம் உள்ளங்கள் எழும்பினாலன்றி , இந்தியாவிற்கு விடிவுகாலம் தோன்றுவது எப்போது ?

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory