பாடல்களால் அநேக மக்கள் உள்ளத்தை உடைத்த டி சாங்கி பிறந்ததினம் இன்று ஆகஸ்ட் 28
டி . எல் . மூடி என்ற உலக பிரசித்தி பெற்ற ஊழியருடன் இணைத்துப் பேசப்படும் இன்னொரு மாபெரும் சிறந்த ஊழியர் டி . சாங்கி என்பவர் ஆவார் .
1870ஆம் ஆண்டு , அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் நடைபெற்ற YMCA சர்வதேச மாநாட்டில் , பங்கு பெற்றபோது ஏற்பட்ட சந்திப்பினால் , இருவரும் இணைந்து ஊழியத்தை மேற்கொண்டனர் .
டி . சாங்கி ஒரு போர்வீரர் . இவர் போர்வீரர்களின் ஆவிக்குரிய தலைவராகவும் காணப்பட்டார் .
எனவே அப்போர் வீரர்களுக்கு அநேக கிறிஸ்தவ உயிர்மீட்சிப் பாடல்களைக் கற்றுக்கொடுத்து , அவர்களை சிறந்த கிறிஸ்தவர்களாக உருவாக்கினார் .
டி . எல் . மூடியின் அழைப்பை ஏற்ற சாங்கி , அவருடன் இணைந்து அநேக ஆவிக்குரிய கூட்டங்களில் கிறிஸ்துவின் நாம மகிமைக்காக பாடல்களைப் பாடினார்.
1875ஆம் ஆண்டு , இவர்கள் இங்கிலாந்தில் தங்களுடைய கூட்டங்களை முடித்துவிட்டு கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தனர் .
அது கிறிஸ்மஸ்க்கு முந்தின தினம் . அப்பயணத்தில் சாங்கி சில பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு பாடலைப் பாடி முடித்த வேளையில் , எதிரே ஒரு பயங்கர முரட்டு மனிதன் வந்து நின்றான் .
*" நீ எப்பொழுதாவது யூனியன் படையில் சேவை புரிந்தாயா ? "* என்று கேட்டான் .
அதற்கு சாங்கி " ஆம் " என்று பதிலளித்தார் .
உடனே அவன் , " நானும் உன் பக்கத்தில் தான் இருந்தேன் . ஆனால் நான் எதிரி படையில் பணிபுரிந்தேன் .
அன்று உனக்கு எதிராக துப்பாக்கியை குறிவைத்து நீட்டிக் கொண்டிருக்கும்போது , நீ இப்பொழுது பாடிய பாடலைப் பாடினாய் . அதனால் , என் மனம் உன்னை சுட்டுக் கொல்ல இடம் கொடுக்கவில்லை , " என்று கூறினான் .
இதைக் கேட்டவுடன் சாங்கி அவனை கட்டித் தழுவினார் .
இருவரும் தனியேப் போய் பேசினர் . அம்முரட்டு மனிதன் கிறிஸ்துவுக்குள் நடத்தப்பட்டான் .
சாங்கியின் பாடல்களால் அநேக மக்கள் உள்ளத்தில் குத்துண்டவர்களாக , தங்கள் பாவ வாழ்க்கையைவிட்டு , கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்துப் புதுவாழ்வை துவங்கினர்.
டி . எல் . மூடி என்ற உலக பிரசித்தி பெற்ற ஊழியருடன் இணைத்துப் பேசப்படும் இன்னொரு மாபெரும் சிறந்த ஊழியர் டி . சாங்கி என்பவர் ஆவார் .
1870ஆம் ஆண்டு , அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் நடைபெற்ற YMCA சர்வதேச மாநாட்டில் , பங்கு பெற்றபோது ஏற்பட்ட சந்திப்பினால் , இருவரும் இணைந்து ஊழியத்தை மேற்கொண்டனர் .
டி . சாங்கி ஒரு போர்வீரர் . இவர் போர்வீரர்களின் ஆவிக்குரிய தலைவராகவும் காணப்பட்டார் .
எனவே அப்போர் வீரர்களுக்கு அநேக கிறிஸ்தவ உயிர்மீட்சிப் பாடல்களைக் கற்றுக்கொடுத்து , அவர்களை சிறந்த கிறிஸ்தவர்களாக உருவாக்கினார் .
டி . எல் . மூடியின் அழைப்பை ஏற்ற சாங்கி , அவருடன் இணைந்து அநேக ஆவிக்குரிய கூட்டங்களில் கிறிஸ்துவின் நாம மகிமைக்காக பாடல்களைப் பாடினார்.
1875ஆம் ஆண்டு , இவர்கள் இங்கிலாந்தில் தங்களுடைய கூட்டங்களை முடித்துவிட்டு கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தனர் .
அது கிறிஸ்மஸ்க்கு முந்தின தினம் . அப்பயணத்தில் சாங்கி சில பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு பாடலைப் பாடி முடித்த வேளையில் , எதிரே ஒரு பயங்கர முரட்டு மனிதன் வந்து நின்றான் .
*" நீ எப்பொழுதாவது யூனியன் படையில் சேவை புரிந்தாயா ? "* என்று கேட்டான் .
அதற்கு சாங்கி " ஆம் " என்று பதிலளித்தார் .
உடனே அவன் , " நானும் உன் பக்கத்தில் தான் இருந்தேன் . ஆனால் நான் எதிரி படையில் பணிபுரிந்தேன் .
அன்று உனக்கு எதிராக துப்பாக்கியை குறிவைத்து நீட்டிக் கொண்டிருக்கும்போது , நீ இப்பொழுது பாடிய பாடலைப் பாடினாய் . அதனால் , என் மனம் உன்னை சுட்டுக் கொல்ல இடம் கொடுக்கவில்லை , " என்று கூறினான் .
இதைக் கேட்டவுடன் சாங்கி அவனை கட்டித் தழுவினார் .
இருவரும் தனியேப் போய் பேசினர் . அம்முரட்டு மனிதன் கிறிஸ்துவுக்குள் நடத்தப்பட்டான் .
சாங்கியின் பாடல்களால் அநேக மக்கள் உள்ளத்தில் குத்துண்டவர்களாக , தங்கள் பாவ வாழ்க்கையைவிட்டு , கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்துப் புதுவாழ்வை துவங்கினர்.
No comments:
Post a Comment