வேதநாயகர் டாக்டர் ஜான் என்பாரிடம் தரங்கம்பாடியில் 1780 முதல் இரண்டாண்டுகள் இறையியல் கல்வி பயின்றார் .
லுத்தரன் ( Lutheran ) பள்ளியில் படித்ததால் அவருடைய எழுத்துக்களில் அவ்வுட்சமயக் கருத்துக்கள் பலவற்றைக் காணமுடி கின்றது .
அக்காலத்தில் வழக்கிலிருந்த பெப்ரீசியஸ் ஐயரின் விவிலிய மொழி பெயர்ப்பு ( 1777 - இல் முதற் பதிப்பு வெளி வந்தது ) அவரைப் பெருமளவில் கவர்ந்திருந்தது .
புதிய ஏற்பாட்டின் கிரேக்க மூலத்தில் இறைவனைச் சுட்டும் தெயாஸ் ( Theos ) என்னும் சொல் அப்பதிப்பில் ' பராபரன் ' என்று மொழி பெயர்க்கப்பட்டது .
வேதநாயகர் இத்தொடரைப் பல இடங்களில் ஆண்டுள்ளார் .
*' வானம் பூமியோ ? பராபரன் மானிடன் ஆனாரோ ! '* என்பது அவருடைய பாடலொன்றின் எடுப்புவரி ஆகும் .
இளமைக் காலத்தில் வேதநாயகர் இயற்றிய நூலொன்றுக்குப் ' பராபரன் மாலை ' என்று பெயர் சூட்டியுள்ளார் .
தாயுமானார் ஆண்ட ' பராபரம் ' என்னும் தொடருக்கு ஈடாகப் ' பராபர வஸ்து ' என்னும் தொடரால் இறைவனை வேதநாயகர் , குறிப்பிடுகின்றார் .
லுத்தரன் ( Lutheran ) பள்ளியில் படித்ததால் அவருடைய எழுத்துக்களில் அவ்வுட்சமயக் கருத்துக்கள் பலவற்றைக் காணமுடி கின்றது .
அக்காலத்தில் வழக்கிலிருந்த பெப்ரீசியஸ் ஐயரின் விவிலிய மொழி பெயர்ப்பு ( 1777 - இல் முதற் பதிப்பு வெளி வந்தது ) அவரைப் பெருமளவில் கவர்ந்திருந்தது .
புதிய ஏற்பாட்டின் கிரேக்க மூலத்தில் இறைவனைச் சுட்டும் தெயாஸ் ( Theos ) என்னும் சொல் அப்பதிப்பில் ' பராபரன் ' என்று மொழி பெயர்க்கப்பட்டது .
வேதநாயகர் இத்தொடரைப் பல இடங்களில் ஆண்டுள்ளார் .
*' வானம் பூமியோ ? பராபரன் மானிடன் ஆனாரோ ! '* என்பது அவருடைய பாடலொன்றின் எடுப்புவரி ஆகும் .
இளமைக் காலத்தில் வேதநாயகர் இயற்றிய நூலொன்றுக்குப் ' பராபரன் மாலை ' என்று பெயர் சூட்டியுள்ளார் .
தாயுமானார் ஆண்ட ' பராபரம் ' என்னும் தொடருக்கு ஈடாகப் ' பராபர வஸ்து ' என்னும் தொடரால் இறைவனை வேதநாயகர் , குறிப்பிடுகின்றார் .
No comments:
Post a Comment