புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

வேதநாயகம் சாஸ்திரியார்

வேதநாயகம் சாஸ்திரியார் பள்ளியாசிரியராகச் சில காலம் பணியாற்றிய போது தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைப் பயின்றிருக்க வேண்டும். யாப்பு முறைகளைக் கற்றிருக்கவேண்டும் , சிறப்பாக , இசைப்பாடல்களில் அவர் தனிக்கவனம் செலுத்தியதாகத் தெரிய வருகின்றது . அக்காலந்தொடங்கி அவர் இயற்றிய நூல்கள் யாவும் மக்கள் இலக்கியப் படைப்புக்களாகவே அமைந்துவிட்டன . மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த ஏற்றப்பாட்டு , கும்மிப்பாட்டு , தாலாட்டு , ஒப்பாரி முதலிய பாவகைகளைச் சார்ந்தே “ ஞான ஏற்றப்பாட்டு ' ' ஞானக்கும்மி ' ' ஞானத்தாலாட்டு ' ' பிரலாப் ஒப்பாரி ' ' பேரின்பக் காதல் ' போன்ற நூல்களை அவர் இயற்றினார் . எவரும் எளிதில் கற்றுப்பாடும் வகையில் அவர் பாடல்கள் அமைந்தன . *' ஞானத்தாலாட் '* டில் வரும் சில அடிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் . காவில் விலகுங் கனியி னாலே விளைந்த பாவவினை தீர்க்கவந்த பாலகனே கண்வளராய்
வேதநாயகம் சாஸ்திரியார் பள்ளியாசிரியராகச் சில காலம் பணியாற்றிய போது தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைப் பயின்றிருக்க வேண்டும்.

யாப்பு முறைகளைக் கற்றிருக்கவேண்டும் , சிறப்பாக , இசைப்பாடல்களில் அவர் தனிக்கவனம் செலுத்தியதாகத் தெரிய வருகின்றது .

அக்காலந்தொடங்கி அவர் இயற்றிய நூல்கள் யாவும் மக்கள் இலக்கியப் படைப்புக்களாகவே அமைந்துவிட்டன .

மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த ஏற்றப்பாட்டு ,
கும்மிப்பாட்டு ,
தாலாட்டு ,
ஒப்பாரி முதலிய பாவகைகளைச் சார்ந்தே “

ஞான ஏற்றப்பாட்டு ' '
ஞானக்கும்மி ' '
ஞானத்தாலாட்டு ' '
பிரலாப் ஒப்பாரி ' '
பேரின்பக் காதல் ' போன்ற நூல்களை அவர் இயற்றினார் .

எவரும் எளிதில் கற்றுப்பாடும் வகையில் அவர் பாடல்கள் அமைந்தன .

*' ஞானத்தாலாட் '* டில் வரும் சில அடிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் .

காவில் விலகுங்
கனியி னாலே விளைந்த
பாவவினை தீர்க்கவந்த
பாலகனே கண்வளராய்

மிஷனரிகளும் வேததநாயகம் சாஸ்திரியார் பற்றிய புகழாரங்கள்

கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும்போது ஜி . யு . போப் அவர்கள் பெப்ரீசியஸ் , டிநொபிலி போன்றோரின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் .

தொடர்ந்து " சிறந்த தமிழ்க் கவிஞர் என்று போற்றத்தகுந்த வகையில் ஒரு கிறிஸ்தவரையாவது காண முடிகிறது .

அவர்தான் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் . அவருடைய நூல்களைத் திரட்டிப் பதிப்பித்திட வேண்டும் " என்று கூறுகிறார் .

பேராயர் கால்டுவெல் தம் நினைவுகளைப் பற்றி எழுதியுள்ள நூலில் , *" 1841 - ஆம் ஆண்டில் தஞ்சை மாநகரில் புகழ் பெற்ற* தஞ்சைக் கவிஞரைச் சந்தித்தேன் .

அவர் பெருந்திறன் படைத்தவர் ; கவிபுனையும் ஆற்றல் மிகுந்தவர் .

பெருத்த அளவில் அவர் பாடல்களை இயற்றியுள்ளார் .

அவற்றுள் பெரும்பான்மையானவை தமிழ்க் கிறிஸ்தவர்களின் தனித் தியானத்திற்கும் கூட்டு வழிபாட்டிற்கும் பயன்படக் கூடியவை , அவருடைய இலக்கியத் தொண்டு என்றும் நின்று நிலைப்பதாகும் , ' ' என்று எழுதியுள்ளார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory