கிறிஸ்து ஆலயம், மிலிட்டரி லைன் திருச்சபை வரலாறு - பாளையங்கோட்டை ,
#Tinnevelly #Historical
பாரம்பரியம் மிகுந்த தென்னிந்திய திருச்சபையின் இவ்வாலயத்தின் பின்னணியம் சரித்திர பூர்வமானது.
திருநெல்வேலி திருச்சபை உருவாகுவதற்குக் காரணமாயிருந்த குளோரிந்தா கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட குளோரிந்தா சிற்றாலயம்.
அங்கு ஆராதித்த முன்னோடியான கிறிஸ்தர்கள் ஆங்கிலேய படைத்தளபதிகள் , SPCK ( Society for the Propagetion of Christian Knowlwdge ) சங்கத்தினர் இவ்விடத்தை வாங்கி ஒரு சிறு ஆலயம் கட்டினர் .
1826 ஆண்டு SPCG ( Society for the Propagetion of Christian Gospel ) சங்கத்தினர் இவ்விடத்தை SPCK சங்கத்தினரிடமிருந்து பெற்று இப்பணியை செய்து வந்தனர் .
SPCG சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ்பகுதியில் தங்களின் பணிகளைத் தொடர்ந்தனர் , ஆயினும் இவ்வாலயத்தின் கல்லரைத் தோட்டம் அவர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது .
ஆங்கில அரசாங்கம் மாதம் ரூ . 35 வாடகை கொடுத்து வந்தது . சில காலம் சென்றபின் SPCG சங்கத்தினர் இவ்வாலய வளாகம் , கல்லரைத் தோட்டத்துடன் சேர்த்து ஆங்கில அரசாங்கத்துக்கு விற்று விட்டனர்.
இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை இவ்வளாகத்தில் அடக்கம் செய்தனர் .
1848 ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியினர் புதிய ஆலயம் கட்ட ரூ . 3930 வழங்கியிருந்தனர்.
எனவே , அவர்கள் இவ்விடத்தை ரூ . 1000க்கு வாங்கி ரூ . 466 செலவிட்டு இவ்வாலயத்தை புதுப்பித்தனர் .
1841 - ல் ஆங்கில அரசாங்கம் ஜியார்ஜ் நெல்லர் கிரீம் ( George KnclerGreame ) இச்சிற்றாலய குருவாக ( Chaplain ) நியமித்தது , அவர் 1844 வரை இச்சிற்றாலயத்தில் பணியாற்றினார்.
அதன்பின் உள்ளூர் C . M . S . சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இச்சிறாலய கவுரவ குருவாக பணியாற்றினார்கள் .
சென்னை பேராயர் டெல்டரி திருநெல்வேலிக்கு வருகை தந்தபோது புதுப்பிக்பட்ட இவ்வாலயத்தை 23 . 02 . 1856ம் ஆண்டு பிரஷ்டை செய்து *கிறிஸ்துஆலயம் என பேரிட்டார்.*
அந்நாட்களில் இந்த ஆலயத்தில் வழிபட்டவர்கள் 100 பேர் மட்டுமே .
ஞாயிறு ஆராதனை மாலையில் நடந்தது .
1858 - ம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது .
காரணம் பாளையங்கோட்டையிலிருந்து வெளியேறிய காலாட்படை எண்ணிக்கையைக் காட்டிலும் புதிதாக வந்த நான்காம் படையினர் , ( fourth Regiment ) குறைவுள்ளது .
1877 - ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆராதனையில் பங்கேற்ற ஐரோப்பியர்கள் , இந்தியர்கள் என்று தனித்தனியாக பதிவு செய்தனர் .
அந்நாட்களில் இரு தரப்பினரும் சமமாக இருந்தனர் .
ஆனால் 1880 - ம் ஆண்டிலிருந்து . இந்தியர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது . ' 1915 - ம் ஆண்டிற்கு பின்னர் ஆராதனையில் பங்கு பெற்ற ஐரோப்பியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து 30 ஆகிறது . ஆனால் இந்தியர்கள் கூடுதலாக ஆராதனையில் பங்கு எடுத்தனர் .
1928 - ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்து 20க்கும் கீழானது .
தூய யோவான் கல்லூரி , 1928 - ல் இன்றைய வளாகத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் கல்லூரி மாணவர்கள் இவ்வாராதனையில் பங்கு பெற்றனர் .
இந்த ஆலயத்தில் முதல் திடப்படுத்தல் ஆராதனை 1859ம் ஆண்டு நடந்தது.
அதில் சென்னை பேராயர் அவர்கள் 23 பேரை திடப்படுத்தினார்கள் . இவ்வாலயம் அனேக மக்களுக்கு அமைதியாய் ஆண்டவரின் பாதத்தில் காத்திருப்பதற்கும் , ஜெபிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது .
ஞாயிறு ஆராதனை மாலை மட்டும் நடந்தது . VMCA , TOC , H . YWCA சங்கத்தினர் SCM கிறிஸ்தவ மாணவர் இயக்கத்தினர் இந்த ஆலயத்தை தங்களின் வழிபாட்டுக்கும் பயன்படுத்திவந்தனர்.
பாளையங்கோட்டை இசை கழகத்தினர் ( palayamkottai MusicalASSOCciation ) இந்த ஆலயத்தை தாகம் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர் , காலஞ்சென்ற பேராசிரியர் G . John Devadason அவர்கள் இசைக்குழுவின் தலைவராகவும் , அவரது துணைவியார் பேராசிரியை தேவதாசன் Organist ஆகவம் சிறப்பான இசைத்தொண்டு செய்துள்ளனர் , 1940 - ம் ஆண்டில் மலையாள கிறிஸ்தவர்கள் இப்பேராலயத்திலுள்ள 2 கல்லூரிகளிலும் பணியாற்ற வந்தனர்.
எனவே , அவர்கள் குடும்பத்தினர் இந்த ஆலயத்தில் ஆராதனையில் ஒழுங்காய் பங்கு எடுத்தனர் .
அந்த நாட்களில் 80க்கும் அதிகமானவர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தனர் .
1953க்குப் பின்னர் மலையாள கிறிஸ்தவர்கள் குறைய ஆரம்பித்து 40 பேர் மட்டும் இங்கு வழிபாட்டில் ஈடுபட்டனர் .
1954ம் ஆண்டு Dr . Rev . G . N . காந்தையா இந்த ஆலயத்துக்கு Deacon ஆக பொறுப்பு ஏற்றார் .
1955ம் ஆண்டு முதல் ஒரு கவுரவ போதகராக அவர் பணி ஆற்றினார் .
1950ம் ஆண்டு முதல் இந்த ஆலயம் திருநெல்வேலி அத்தியட்சாதீனத்தில் அங்கம் பெற்று 1954 - ம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்திலிருந்து அத்தியட்சாதீனத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
Dr . Rev . G . N . காந்தையா இந்த ஆலய கவுரவ குருவாக 1954 முதல் 1981 வரை சிறப்பான பணி செய்துள்ளார் .
காலை , மாலை இரு ஆராதனைகளையும் நடத்துவார்கள்.
அவருடைய பணி காலத்தில் தான் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலை 9 மணிக்குத் தமிழ் ஆராதனை நடத்த ஆரம்பித்தனர்.
இவ்வாலயத்தில் 10 - 02 - 1957ல் முதன் முதலாகத் தமிழ் ஆராதனை நடைபெற்றது .
இந்த தமிழ் ஆராதனைக்கு அருள் திரு . G . N . காந்தையா அவர்களும் நெல்லை முதல் தமிழ் பேராயர் A . G . ஜெயராஜ் அவர்களும் இதற்கு வித்திட்டவர்கள் ஆவார்கள் , தமிழ் இசை முறையில் கீர்த்தனைகள் பாடி ஆராதனை நடத்திய பெருமை Rev . காந்தையாவையே சாரும்.
Miss . ஆர்டில் அவர்கள் ஆங்கிலேயரின் இறுதி organist ஆக 20 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் .
1945 முதல் திருமதி ரேச்சல் தேவதாஸ் அம்மையார் 25 ஆண்டுகள் organist ஆக சிறப்பான சேவை செய்துள்ளார்கள்.
Mr . Tompson இந்த ஆலயத்தில் organist ஆக 1969 - லிருந்து 1990 வரை உற்சாகமாக பணியாற்றி உள்ளார் .
அவர் organ வாசிக்கும் திறமையினால் அனேக இளைஞர்கள் இசையில் நாட்டம் கொண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.
#Tinnevelly #Historical
பாரம்பரியம் மிகுந்த தென்னிந்திய திருச்சபையின் இவ்வாலயத்தின் பின்னணியம் சரித்திர பூர்வமானது.
திருநெல்வேலி திருச்சபை உருவாகுவதற்குக் காரணமாயிருந்த குளோரிந்தா கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட குளோரிந்தா சிற்றாலயம்.
அங்கு ஆராதித்த முன்னோடியான கிறிஸ்தர்கள் ஆங்கிலேய படைத்தளபதிகள் , SPCK ( Society for the Propagetion of Christian Knowlwdge ) சங்கத்தினர் இவ்விடத்தை வாங்கி ஒரு சிறு ஆலயம் கட்டினர் .
1826 ஆண்டு SPCG ( Society for the Propagetion of Christian Gospel ) சங்கத்தினர் இவ்விடத்தை SPCK சங்கத்தினரிடமிருந்து பெற்று இப்பணியை செய்து வந்தனர் .
SPCG சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ்பகுதியில் தங்களின் பணிகளைத் தொடர்ந்தனர் , ஆயினும் இவ்வாலயத்தின் கல்லரைத் தோட்டம் அவர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது .
ஆங்கில அரசாங்கம் மாதம் ரூ . 35 வாடகை கொடுத்து வந்தது . சில காலம் சென்றபின் SPCG சங்கத்தினர் இவ்வாலய வளாகம் , கல்லரைத் தோட்டத்துடன் சேர்த்து ஆங்கில அரசாங்கத்துக்கு விற்று விட்டனர்.
இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை இவ்வளாகத்தில் அடக்கம் செய்தனர் .
1848 ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியினர் புதிய ஆலயம் கட்ட ரூ . 3930 வழங்கியிருந்தனர்.
எனவே , அவர்கள் இவ்விடத்தை ரூ . 1000க்கு வாங்கி ரூ . 466 செலவிட்டு இவ்வாலயத்தை புதுப்பித்தனர் .
1841 - ல் ஆங்கில அரசாங்கம் ஜியார்ஜ் நெல்லர் கிரீம் ( George KnclerGreame ) இச்சிற்றாலய குருவாக ( Chaplain ) நியமித்தது , அவர் 1844 வரை இச்சிற்றாலயத்தில் பணியாற்றினார்.
அதன்பின் உள்ளூர் C . M . S . சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இச்சிறாலய கவுரவ குருவாக பணியாற்றினார்கள் .
சென்னை பேராயர் டெல்டரி திருநெல்வேலிக்கு வருகை தந்தபோது புதுப்பிக்பட்ட இவ்வாலயத்தை 23 . 02 . 1856ம் ஆண்டு பிரஷ்டை செய்து *கிறிஸ்துஆலயம் என பேரிட்டார்.*
அந்நாட்களில் இந்த ஆலயத்தில் வழிபட்டவர்கள் 100 பேர் மட்டுமே .
ஞாயிறு ஆராதனை மாலையில் நடந்தது .
1858 - ம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது .
காரணம் பாளையங்கோட்டையிலிருந்து வெளியேறிய காலாட்படை எண்ணிக்கையைக் காட்டிலும் புதிதாக வந்த நான்காம் படையினர் , ( fourth Regiment ) குறைவுள்ளது .
1877 - ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆராதனையில் பங்கேற்ற ஐரோப்பியர்கள் , இந்தியர்கள் என்று தனித்தனியாக பதிவு செய்தனர் .
அந்நாட்களில் இரு தரப்பினரும் சமமாக இருந்தனர் .
ஆனால் 1880 - ம் ஆண்டிலிருந்து . இந்தியர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது . ' 1915 - ம் ஆண்டிற்கு பின்னர் ஆராதனையில் பங்கு பெற்ற ஐரோப்பியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து 30 ஆகிறது . ஆனால் இந்தியர்கள் கூடுதலாக ஆராதனையில் பங்கு எடுத்தனர் .
1928 - ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்து 20க்கும் கீழானது .
தூய யோவான் கல்லூரி , 1928 - ல் இன்றைய வளாகத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் கல்லூரி மாணவர்கள் இவ்வாராதனையில் பங்கு பெற்றனர் .
இந்த ஆலயத்தில் முதல் திடப்படுத்தல் ஆராதனை 1859ம் ஆண்டு நடந்தது.
அதில் சென்னை பேராயர் அவர்கள் 23 பேரை திடப்படுத்தினார்கள் . இவ்வாலயம் அனேக மக்களுக்கு அமைதியாய் ஆண்டவரின் பாதத்தில் காத்திருப்பதற்கும் , ஜெபிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது .
ஞாயிறு ஆராதனை மாலை மட்டும் நடந்தது . VMCA , TOC , H . YWCA சங்கத்தினர் SCM கிறிஸ்தவ மாணவர் இயக்கத்தினர் இந்த ஆலயத்தை தங்களின் வழிபாட்டுக்கும் பயன்படுத்திவந்தனர்.
பாளையங்கோட்டை இசை கழகத்தினர் ( palayamkottai MusicalASSOCciation ) இந்த ஆலயத்தை தாகம் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர் , காலஞ்சென்ற பேராசிரியர் G . John Devadason அவர்கள் இசைக்குழுவின் தலைவராகவும் , அவரது துணைவியார் பேராசிரியை தேவதாசன் Organist ஆகவம் சிறப்பான இசைத்தொண்டு செய்துள்ளனர் , 1940 - ம் ஆண்டில் மலையாள கிறிஸ்தவர்கள் இப்பேராலயத்திலுள்ள 2 கல்லூரிகளிலும் பணியாற்ற வந்தனர்.
எனவே , அவர்கள் குடும்பத்தினர் இந்த ஆலயத்தில் ஆராதனையில் ஒழுங்காய் பங்கு எடுத்தனர் .
அந்த நாட்களில் 80க்கும் அதிகமானவர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தனர் .
1953க்குப் பின்னர் மலையாள கிறிஸ்தவர்கள் குறைய ஆரம்பித்து 40 பேர் மட்டும் இங்கு வழிபாட்டில் ஈடுபட்டனர் .
1954ம் ஆண்டு Dr . Rev . G . N . காந்தையா இந்த ஆலயத்துக்கு Deacon ஆக பொறுப்பு ஏற்றார் .
1955ம் ஆண்டு முதல் ஒரு கவுரவ போதகராக அவர் பணி ஆற்றினார் .
1950ம் ஆண்டு முதல் இந்த ஆலயம் திருநெல்வேலி அத்தியட்சாதீனத்தில் அங்கம் பெற்று 1954 - ம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்திலிருந்து அத்தியட்சாதீனத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
Dr . Rev . G . N . காந்தையா இந்த ஆலய கவுரவ குருவாக 1954 முதல் 1981 வரை சிறப்பான பணி செய்துள்ளார் .
காலை , மாலை இரு ஆராதனைகளையும் நடத்துவார்கள்.
அவருடைய பணி காலத்தில் தான் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலை 9 மணிக்குத் தமிழ் ஆராதனை நடத்த ஆரம்பித்தனர்.
இவ்வாலயத்தில் 10 - 02 - 1957ல் முதன் முதலாகத் தமிழ் ஆராதனை நடைபெற்றது .
இந்த தமிழ் ஆராதனைக்கு அருள் திரு . G . N . காந்தையா அவர்களும் நெல்லை முதல் தமிழ் பேராயர் A . G . ஜெயராஜ் அவர்களும் இதற்கு வித்திட்டவர்கள் ஆவார்கள் , தமிழ் இசை முறையில் கீர்த்தனைகள் பாடி ஆராதனை நடத்திய பெருமை Rev . காந்தையாவையே சாரும்.
Miss . ஆர்டில் அவர்கள் ஆங்கிலேயரின் இறுதி organist ஆக 20 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் .
1945 முதல் திருமதி ரேச்சல் தேவதாஸ் அம்மையார் 25 ஆண்டுகள் organist ஆக சிறப்பான சேவை செய்துள்ளார்கள்.
Mr . Tompson இந்த ஆலயத்தில் organist ஆக 1969 - லிருந்து 1990 வரை உற்சாகமாக பணியாற்றி உள்ளார் .
அவர் organ வாசிக்கும் திறமையினால் அனேக இளைஞர்கள் இசையில் நாட்டம் கொண்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment