புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி ரிச்சர்டு ஆலன்

அவ்வாலயத்தில் தொழுது கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை*
மிஷனரி ரிச்சர்டு ஆலன் நினைவு தினம் (26.03.1831)
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆண்டவரை ஆராதிக்கும் வாஞ்சையுடன் ரிச்சர்ட் ஆலனும் , அவரது நண்பர் அப்சலோம் ஜோன்சும் , உடன் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களுமாக இணைந்து , அந்த ஆலயத்திற்குள் நுழைந்தனர் .
முழுங்கால் படியிட்டு ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் செய்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென சிலர் அவர்களை முரட்டுத்தனமாய் பிடித்து வெளியே தள்ளினர் . கருப்பு இன மக்கள் , அவ்வாலயத்தில் தொழுது கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. மிகுந்த மன வேதனையுடன் அவர்கள் அங்கிருந்து கடந்து சென்றனர்.
ரிச்சர்ட் ஆலன் ஒரு அடிமையின் பெற்றோருக்கு மகனாக பிறந்தார் . இவர் பெற்றோரும் , அவர்களது நான்கு குழந்தைகளும் டெலவர் விவசாயிக்கு அடிமைகளாக விற்கப்பட்டிருந்தனர் . சிறுவயதிலேயே மிகவும் துடிதுடிப்பாகவும் , உற்சாகமாகவும் காணப்பட்ட ஆலன் , எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டார் . இதனால் , வேதாகமத்தை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது . இவரின் எஜமான் நல்ல மனிதராக காணப்பட்டபடியால் , திருச்சபைக்கு செல்வதை தடை செய்யவில்லை . - 1786ம் ஆண்டு இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிறருக்கு அறிவிக்கவும் , தன் வீட்டிலேயே கூட்டங்கள் நடத்தவும் , அவருடைய எஜமான் தன் வீட்டை ஆலனுக்கு திறந்து கொடுத்தார் . அடிமைத்தனத்திலிருந்த ஆலனையும் அவர் குடும்பத்தாரையும் விடுதலை செய்தார்.
விடுதலைப் பெற்ற ஆலன் , 1815ம் ஆண்டிலிருந்து 1830ம் ஆண்டு வரை விடுதலையான கருப்பர்களின் தலைவராக செயல்பட்டார் . ஆப்பிரிக்கன் சபையை உருவாக்கினார் . தன்னை போன்ற கருப்பு இன மக்களுக்கு இயேசுகிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்க , தன்னை ஒரு மிஷனெரியாக அர்ப்பணித்தார் . ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து , அடிமைகளின் வாழ்வில் கிறிஸ்து தரும் விடுதலை வாழ்வை எடுத்துரைத்தார் . 1816ம் ஆண்டு தாம் உருவாக்கிய திருச்சபையின் முதல் பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அடிமையாக பிறந்து , அடிமைகளுக்காகவே வாழ்ந்த இவர் அடிமைகளின் விடிவெள்ளி.
*அருட்பணியாளர்களின் அரிய வரலாற்றிலிருந்து திரட்டியது*
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory