மிஷனரி பிஷப் ஹீபர் நினைவு தினம் - ஏப்ரல் 03*
தூய , தூய , தூயா , சர்வ வல்ல நாதா . . " இப்பாடல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
ஆன்மீக உணர்வுகளைத் தட்டி எழுப்பும் அற்புத பாடல் இது . இப்பாடலை இயற்றிய வர் *பிஷப் ஹீபர்*. இளமையிலேயே கவி நயத்தை கடவுளின் நாம மகிமைக்காக பயன்படுத்தியவர்.
இவர் எழுதிய 11 பாடல்கள் ஆங்கிலத் திருச்சபையின் பாடல் ) புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன .
சபை குருவாக பயிற்சி பெற்று நல்லதொரு ஆயராக ஐரோப்பாவின் பல இடங்களுக்கு சென்று அருமையான பிரசங்கங்களை செய்து அநேகரை ஆண்டவருக்குள் வழிநடத்தினார் .
1823ம் ஆண்டு இந்தியாவிற்கு பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்டு மிகுந்த ஆவலுடன் புறப்பட்டு வந்தார் . 1823ம் ஆண்டு , ஜீன் மாதம் 1ஆம் தேதி லாம்பர்த் அரண்மனையில் அபிஷேகம் செய்யப்பட்டார் . பின்னர் , நாட்டின் பல பாகங்களுக்கும் சுற்று பயணம் மேற்கொண்டார் . சென்ற இடங்களிலெல்லாம் திடப்படுத்தல் ஆராதனைகளை நடத்தி அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
சென்னையில் வேப்பேரி என்ற இடத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டினார் . தமிழ் மொழியிலேயே யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைத்தார் . *குறைந்த நாட்களில் மிகுந்த சாதனைகளைச் செய்தார்*. சிறந்த கிறிஸ்தவ பக்தராக , சுவிசேஷ வாஞ்சை படைத்தவராக , சிறந்த கவிஞராக , மக்கள் உள்ளத்தை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்தும் நல்ல ஆயராக , தனது பணிகளை செவ்வனே நிறைவேற்றினார்.
வயது 44 . ஏப்ரல் 3 இதே நாள் . 1826ஆம் வருடம் . அகிலமெங்கும் சென்று அற்புதமான பாடல்களால் அரும்பணியாற்ற ஆவல் கொண்டிருந்த ஹீபரின் இதயம் துடிக்க மறுத்தது . மக்களை துக்கத்தினுள் ஆழ்த்தி தூயாதி தூயவரின் சர்வ வல்ல நாதரின் பாதம் சேர்ந்தார்.
திருச்சிராப்பள்ளியில் இவர் நினைவு கல்லூரியும் , உயர்நிலை பள்ளிகளும் , சென்னையில் விடுதியொன்றும் இவர் புகழை அறிவித்துக்கொண்டிருக்கின்றன.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது....
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment