பேராயர் பங்களா*
பேராயர் சார்ஜெண்ட் கடுமையான உழைப்பினால் வியாதிப்பட்டார்.
திருச்சியிலிருந்து டாக்டர் நார்வே சிகிட்சை கொடுக்க அழைக்கப்பட்டார்.
டாக்டர் பேராயர் வசிக்கும் வீட்டை விட்டு உடனடியாக வேறு வீட்டில் வசிக்க வேண்டுமென ஆலோசனை கூறினார்.
அக்காலத்தில் மிஷனுக்கு வேறு பெரிய பங்களா இல்லை .
பேராயர் சார்ஜெண்டை சந்திக்கக் காவல்துறை *கண்காணிப்பாளர் ஸ்டீவென்சன் வந்தார்.* மிஷனெரிகள் அவரிடம் டாக்டர் நார்வே சொன்ன ஆலோசனையைக் கூறினார்கள்.
உடனே ஸ்டீவன்ஸன் தன்னுடைய பங்களாவைப் பேராயருக்குக் கொடுத்தார் .
பிஷப் சார்ஜெண்ட் அதில் குடியேறினார் . இன்றும் திருநெல்வேலி திருமண்டலப் பேராயர் அந்த பங்களாவில்தான் வசிக்கின்றனர்.
No comments:
Post a Comment