பேய்க் கோவில் ஜெப வீடாய்*
மிக்கேல் உபதேசியார் ரேனியஸ் ஐயருடைய அனுமதியுடன் முதல் முதல் செய்த வேலை , அன்று கொடை நடத்தப்பட்ட அப் பேய்க் கோவிலேயே கிறிஸ்தவ ஜெப வீடாக மாற்றி , அதிலேயே ஆராதனைகள் நடத்த ஆரம்பித்ததாகும்.
ஞானஸ்நானத்துக்கு ஆயத்தமாகிறவர்கள் கற்க வேண்டிய கிறிஸ்து மார்க்கச் சத்தியங்களையும் , பத்துக் கற்பனை , விசுவாசப் பிரமாணம் , கர்த்தருடைய ஜெபம் , ரட்சகரின் வாழ்க்கை வரலாறு முதலியவற்றையும் அவ்வாலயத்திலும் , வீடுகளிலும் , அம்மக்கள் வேலை செய்கிற இடங்களிலும் வைத்துப் போதித்து வந்தார்.
1826 மார்ச் மாதத்தில் நெடுவிளையிலும் சோலைகுடியிருப்பிலும் சுமார் 25 பேர் ஞானஸ்நானத்துக்குத் தயாரானார்கள்.
அடுத்த மாதம் 6 ஆம் தேதியில் ரேனியஸ் சோலை குடியிருப்பு மக்களைச் சோதித்து , அவர்களில் ஒன்பது பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் . 7 . 4 . 1826 ல் அவர் நெடுவிளைக்குச் சென்று ஒரு ஞானஸ்நான ஆராதனை நடத்தி ஏழு குடும்பமான பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ....
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment