புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பேய்க் கோவில் ஜெப வீடாய்

பேய்க் கோவில் ஜெப வீடாய்*
மிக்கேல் உபதேசியார் ரேனியஸ் ஐயருடைய அனுமதியுடன் முதல் முதல் செய்த வேலை , அன்று கொடை நடத்தப்பட்ட அப் பேய்க் கோவிலேயே கிறிஸ்தவ ஜெப வீடாக மாற்றி , அதிலேயே ஆராதனைகள் நடத்த ஆரம்பித்ததாகும்.
ஞானஸ்நானத்துக்கு ஆயத்தமாகிறவர்கள் கற்க வேண்டிய கிறிஸ்து மார்க்கச் சத்தியங்களையும் , பத்துக் கற்பனை , விசுவாசப் பிரமாணம் , கர்த்தருடைய ஜெபம் , ரட்சகரின் வாழ்க்கை வரலாறு முதலியவற்றையும் அவ்வாலயத்திலும் , வீடுகளிலும் , அம்மக்கள் வேலை செய்கிற இடங்களிலும் வைத்துப் போதித்து வந்தார்.
1826 மார்ச் மாதத்தில் நெடுவிளையிலும் சோலைகுடியிருப்பிலும் சுமார் 25 பேர் ஞானஸ்நானத்துக்குத் தயாரானார்கள்.
அடுத்த மாதம் 6 ஆம் தேதியில் ரேனியஸ் சோலை குடியிருப்பு மக்களைச் சோதித்து , அவர்களில் ஒன்பது பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் . 7 . 4 . 1826 ல் அவர் நெடுவிளைக்குச் சென்று ஒரு ஞானஸ்நான ஆராதனை நடத்தி ஏழு குடும்பமான பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ....
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory