புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தந்தானைத் துதிப்போமே (கும்மிப்பாடல் வரலாறு)

கும்மிப்பாடல் வரலாறு
காலையில் சுத்தாங்க திருச்சபை பற்றிய வரலாற்று பதிவு செய்து இருந்தேன்
*சுத்தாங்கத்து நற்சபையே- உன்னை*
என்ற பாடலின் பல்லவி வரலாற்றை நான் அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
அனைவரும் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைத்து தேடி பதிவு செய்துள்ளேன்.
இந்துப் பின்னணியிலிருந்து இயேசு கிறிஸ்துவை எற்றுக்கொண்ட குடும்பத்தின் மூன்று சகோதரர்களும் , தங்களை ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து , திருச்சபையைக் கட்டும் போதகர்களாக , முழுநேரப்பணியில் ஈடுபட்டார்கள் என்பது வியக்கத் தக்கதல்லவா ?
இப்படிப்பட்ட குடும்பத்தின் மூத்த சகோதரராக விளங்கியவரே *வே . மாசிலாமணி ஐயராவார்.* அவரது இளைய தம்பி வே . சந்தியாகு ஐயரும் , சிறந்த பாடலாசிரியர் மற்றும் இசை வல்லுனர் என்பதை நாம் அறிவோம்.
மாசிலாமணி ஐயர் திருப்புவனம் என்ற சிற்றூரின் போதகராகப் பணியாற்றிய நாட்களில் , இந்தக் *கும்மிப்பாடலை* எழுதினார்.
ஆண்டவரின் புகழை , அனைவரும் அறியும் வண்ணம் , அவரைப் போற்றிப்பாட , திருச்சபையாகிய கன்னியரை அழைப்பதாக , இப்பாடலை மாசிலாமணி எழுதியிருக்கிறார்.
சிறந்த வயலின் வித்துவானாகிய மாசிலாமணி , தனது பாடல் மற்றும் இசைத் தாலந்துகளை , நற்செய்திப் பணிக்கென முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டார்.
திருவண்ணாமலையின் வாரச் சந்தை நாட்களில் , மாசிலாமணி தன் நண்பர்களுடன் அங்கு சென்று இசைக்கச்சேரி நடத்துவார்.
அப்போது அவரின் பாடலையும் இசையையும் கேட்க , சந்தைக்கு வந்த மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள்.
அவர்களுக்கு நற்செய்தியைப் பக்குவமாகப் பாடல்கள் வழியாக அவர் எடுத்துக்கூறி , ஆண்டவரின் அன்பால் அவர்களைக் கவர்ந்திடுவார்.
கிறிஸ்தவ சமுதாயத்திற்கு , பண்டிகைகளின் மகிழ்ச்சியைத் கூட்டித் தரும் பிரபலமான பாடல்களாக விளங்குகின்றன.
கருத்துச் செறிவுடன் விளங்கும் இப்பாடல்கள் , நூற்றாண்டு காலமாய் , திருச்சபை மக்களனைவரும் விரும்பிப் பாடும் பாடல்களாகத் திகழ்கின்றன.
இப்பாடல்கள் பிரபலமாவதற்கு , அவர் அமைத்த சிறந்த இசைப்பண்களும் காரணமாகும்.
இசையும் பாடலின் சொல்லடுக்கும் , அருமையாக இணைந்து வருவதை , " ஆனந்தமே ஜெயா ஜெயா " என்ற பாடலைப் பாடி மகிழ்வோர் நன்கு அறிவர்.
தந்தானைத் துதிப்போமே
Thanthanai Thuthipome
தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை
1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை
2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை
3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை
4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை
5. சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory