புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருமண்டல சொத்துக்கள் பற்றிய தகவல்கள்

திருமண்டல சொத்துக்கள் பற்றிய தகவல்கள்* தெரிந்து கொள்ள மட்டும் மூலச் சட்டத்திலிருந்து...... 2
*1921ம் ஆண்டு சி .எம் .எஸ் .சங்கம் கையளித்தச் சொத்து*:
சி .எம் .எஸ் .மாவட்டச் சபை மன்றம் நிர்வகிக்கும்படி சர்ச் மிஷன் சங்கத்தாரால் 1921ம் ஆண்டு திருநெல்வேலித் திருமண்டல ந்திருக்கவே அறக்கட்டளைக்குத் கையளித்தச் சொத்தின் விஷயமாய் இதனால் தெரிவிப்பது யாதெனில் : 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி எழுதிய நன்கொடைப் பத்திரத்தின் 9வது பகுதி ( ஏ ) ( பி ) என்ற பிரிவுகளில் கண்டபடி மேற்கண்ட பத்திரத்தில் சி .எம் .எஸ் .மாவட்டச் சபை மன்றத்திற்கு ஏற்பட்டதாயுள்ள சகல கடமைகளையும் மேற்படி சொத்துக்கள்
திருநெல்வேலி சபைமன்றங்களில் எந்தெந்த மன்றங்கள் எல்லைக்குள் இருக்குமோ அவற்றை அந்தந்த மன்றங்கள் .நிறைவேற்றும்படி 1922ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி கூடினத் திருமண்டலச் செயற்குழுவின் பத்தாவது தீர்மானத்தின்படி சபைமன்றங்களே , நியமித்துக் கொண்டார்கள் .ஆயினும் இவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்க லாபத்தை உபயோகிப்பதற்கு ஏற்பட்ட எந்த ஒழுங்குக்கும் அனுமதியளிக்கும் கடமைத் திருமண்டலச் செயற்குழுவிற்கே உரியது .
*அருட்பணிச் சங்கங்களின் சொத்து 
அருட்பணிச் சங்கங்களுக்குப் பாத்தியப்பட்டதும் , திருமண்டலத்தின் உபயோகத்திற்காகத் திருமண்டலப் பெருமன்றத்திற்கு அளிக்கப்பட்டதுமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் நல்ல நிலைமையில் வைத்துக் கொள்வதற்கும் மேற்படி நிலங்களை மேல்விசாரணை செய்வதற்கும் , அத்திருமண்டலச் செயற்குழு வேறு ஒழுங்கு செய்திராவிடில் திருமண்டலப் பொருளாளரே பொறுப்புதார் ராவர் . அச்சொத்துக்களின் நிலை திருப்திகரமாயிருக்கிறதா என்பதை அந்தந்தச் சொத்துக்குப் பாத்தியப்பட்டச் சங்கத்தின் பிரதிநிதி காலாகாலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் . அவசியம் நேரும் சமயம் அவற்றைப் பற்றித் திருமண்டலச் செயற்குழுவிற்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும் . அச்சபை அதைப் பற்றித் தகுந்த நடவடிக்கை நடத்தாவிட்டால் தன் சங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும் .
*கட்டிடங்கள் 
புதுக்கட்டிடங்கள் கட்டுவதும் திருமண்டலச் சொத்தின் மேல் இருக்கும் ஒரு கட்டிடத்தைப் பழுது பார்ப்பதும் அதைப் பெரியதாய்க் கட்டுவதுமான எவ்வித பெருமுயற்சியும் திருமண்டலச் செயற்குழுவின் அனுமதிப் பெற்றுக் கொள்ளாமலும் , இப்படிப்பட்ட வேலைகளை நடப்பிப்பதற் காகக் காலத்திற்குக் காலம் மேற்படிச் சபை ஏற்படுத்தும் பொது விதிகளுக்கு இசைந்திராமலும் ஆரம்பிக்கக் கூடாது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory