புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஜாதியை வெறுத்த ரேனியஸ்

ஜாதியை வெறுத்த ரேனியஸ்*
1821ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரேனியஸ் செமினெரியை ஆரம்பித்தார் , அப்பொழுது உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழுபேர் சேர்ந்தனர்.
ஜூன் மாதத்தில் பத்து நாடார் குலத்தைச் சேர்ந்தவர்களும் மூன்று மூன்று ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்ந்தனர்.
உயர் ஜாதி மாணவர்கள் தாழ்ந்த ஜாதி மாணவர்களோடு அமர்ந்து உணவருந்த மறுத்துவிட்டனர்.
*ரேனியஸ் ஐயர்* மாணவர்களின் பெற்றோரை அழைத்துப் பேசினார் . அவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தாழ்ந்த ஜாதி மாணவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள் என்று பதில் அளித்தனர்.
அதோடு தங்களையும் தாழ்ந்த ஜாதி மக்களையும் பிரிக்க உணவருந்தும் அறையில் ஒரு *சுவர்* எழுப்பிவிடக் கேட்டனர்.
நாடார் ஜாதி மாணவர்கள் ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து தங்களைப்பிரிக்க மறைவு கட்டக் கோரிக்கை வைத்தனர்.
ரேனியஸோ உடனடியாக நான் செமினெரியை மூடிவிட்டேன். நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிவிட்டார்.
1822ஆம் ஆண்டு ஜாதி பேதம் பார்க்காமலிருப்போம் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க மறுபடியும் ரேனியஸ் செமினெரியை ஆரம்பித்தார்.
அந்த செமினெரிதான் *பிஷப் சார்ஜென்ட் ஆசிரியப் பயிற்சி பள்ளி*
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory