புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பயணச் செலவை வாங்க மறுத்த சுவார்ட்ஸ்

பயணச் செலவை வாங்க மறுத்த சுவார்ட்ஸ்*
ஆலயப் பிரதிஷ்டைக்கு வந்த சுவார்ட்ஸ் ஐயருக்குப் பயணம் செலவிற்காக ( குளோரிந்தா நாறு ரூபாய் கொடுத்தார் , சுவார்ட்ஸ் ) அதை ஏற்க மறுத்து தாம் அந்தப் பணத்தை வாங்கினால் *பணத்திற்காக சுவார்ட்ஸ் ஊழியம் செய்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள்* என்று கூறினார் . மற்றும் குளோரிந்தாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் செய்த *பாவங்களைக் கண்டிக்காமல் சுவார்ட்ஸ் இருந்து விட்டார்* என்று தம்முடைய ஊழியத்தைக் குறை கூறுவார்கள் என்றும் நினைத்தார்.
அதுவும் அல்லாமல் குளோரிந்தா பணக்காரியானபடியால் தன் பணத்தைக் கொடுத்து தான் நினைத்தக் காரியங்களைச் செய்து விடுவாள் என்று அவளைக் குறித்து , ஜனங்கள் தவறாகப் பேசுவார்கள் என்று , குளோரிந்தா கொடுத்த நூறு ரூபாயைச் சுவார்ட்ஸ் வாங்க மறுத்து விட்டார்.
இன்றைய ஊழியக்காரர்கள் தங்கள் வாயைத் திறந்தாலே பணம் , பணம் வேண்டுமெனப் பிரசங்கிக்கிறார்கள்.
எழுதினால் , எங்களுக்கு நன்கொடை அனுப்புங்கள் என்று எழுதுகின்றார்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் , அப்போஸ்தலர் 20 : 35 இல் , *" இப்படிப் பிரயாசப்பட்டு பலவீனரைத் தாங்கவும் , வாங்குவதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான் ”*
என்று சொன்னதை அறியாதிருக்கிறார்கள்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory