புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இந்தியர்களில் முதல் குரு ஞானமுத்து

இந்தியர்களில் முதல் குரு ' என்ற பெருமையைப் பெற்ற இவர்*
Rev . ஞானமுத்து நினைவு மாதம்
நற்செய்திப் பணியில் நாட்டம் தேவை
இ ந் தி யா விற் கு கூ வி சே ஷ ம் அறிவிக்க வெளிநாட்டிலிருந்து மிஷனெரிகள் வந்து கொண்டிருந்த காலம் அது.
இந்தியர்களுக்கு இந்தியரின் முறையில் நற்செய்தி அறிவிக்க ஆட்களோ குறைவு.
அதிலும் குருத்துவ பட்டம் பெற்றவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் . 1816ஆம் ஆண்டில் பிறந்த *ஞானமுத்துவுக்கோ* உள்ளத்தில் வாஞ்சை ; பத்து வயதிலே எழுப்புதல் தீ அவர் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
பதினொன்றாம் 1815 - 1808 வயதில் ரேனியஸ் ஐயர் நடத்திய செமினரியில் சேர்ந்தார். கற்றவர்களையும் மிஞ்சிய கல்வியறிவை அங்கே பெற்றார் .
ரேனியஸ் ஐயர் அவர்களால் 1833ம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்ற இவர் , இறையியல் கல்வியை இனிதே முடித்தார் . சென்னையில் பத்து ஆண்டுகள் பணி செய்த பின்னர் , *திருநெல்வேலியில்* தன் பணியைத் தொடர்ந்தார் . டோனாவூர் , நல்லூர் , கோவிலூத்து போன்ற இடங்களில் இவர் செய்த பணிகளை இன்றும் காணலாம் . அயராத உழைப்போ அவர் உடலை மிகவும் பாதித்தது . ஆஸ்துமா மற்றும் பக்கவாத நோய்கள் அவரைத் தொற்றிக் கொண்டாலும் , நற்செய்திப் பணியே அவரின் முழு மூச்சாகக் காணப்பட்டது.
ஆங்கிலம் , கிரேக்கம் , லத்தீன் , எபிரேயம் , தெலுங்கு போன்ற மொழிகளில் புலமையடைந்த இவர் ' கடவுளின் பங்கு ' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் . பேராயர் சர்ஜென்ட்ஐயரால் சிறப்பான பாராட்டையும் பெற்றார் . ' ........ இந்தியர்களில் முதல் குரு ' என்ற பெருமையைப் பெற்ற இவர் இதே மாதம் , 1888ஆம் ஆண்டு ஆயிரமாயிரம் மக்கள் சூழ மண்ணில் விதைக்கப்பட்டார் ; விண்ணில் முளைத்தார்.
அருட்பணியாளர்களின் தகவல் களஞ்சியத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory