மேசியாதான் உங்கள் உண்மையான ' சாமி*
தேவர்குளம் வட்டத்தில் ரெட்டியபட்டி என்றொரு ஊர் இருந்தது . ஊருக்கு மேற்கேயுள்ள தோப்பிலிருந்த பழமையான ' சாமி சிலை ஒன்றை குல தெய்வமாகக் கும்பிட்டு வந்தார்கள் , அன்று சாமிக்கு ' கொடை கொடுக்கும் நாள் . மக்கள் குடித்துக் கும்மாளமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கும் பொழுது குதிரையில் வந்த மிஷனெரி ஒருவர் திடீரென்று கூட்டத்தினுள் நுழைந்து நின்றார்.
கொட்டு முழக்கத்திலும் - மணப் பொடிகளின் நறும்புகை யிலும் மயங்கிய யாராவது ஒருவருக்கு சாமி வரும் . அவர் " சாமியாடுவார் .அப்படி ஒருவரை எதிர்பார்த்து வெகு நேரம் காத்திருந்து யாருக்கும் சாமியாட்டம் வரவில்லை. அவ்வேளையில் வெள்ளைக்கார மிஷெனெரி கூட்டத்தின் நடுவில் வந்து நின்றது மக்களுக்கு ஆச்சரியமாயிருந்தது .தங்கள் சாமி தாக வானத்திலிருந்து இறங்கி விட்டதாக எண்ணி காலில் விழுந்து வணங்கினர். அவர் கிறிஸ்துவாகிய மேசியா பற்றி விரிவாக எடுத்து விளம்பினார் .அந்த *மேசியாதான் உங்கள் உண்மையான ' சாமி* என்று கூறினார் .' இன்று முதல் இவ்வூர் ' மேசியாபுரம் ' என்றும் கூறிச் சென்றவர் திரும்ப வரவேயில்லை , அன்று முதல் ரெட்டியபட்டி , மேசியாபுரம் ஆனது , மேசியாவை அறிவித்த மினெரி நினைவாக அவ தொ ' மேசியாபுரம் ' என்று பெயர் விளங்கி வருகிறது.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment