ஜமீன்தார் வரும்பொழுது வாங்கா ஊதி வரவேற்க வேண்டுமாம் கொடுமையை சந்தித்த. சத்திரப்பபட்டி மக்கள்
செவல்பட்டிக்கு 10 கிலோமீட்டர் மேற்கே உள்ள ஊர் சத்திரப்பட்டி , கோயில்பட்டியிலிருந்து திருவேங்கடம் வழியாக இராஜபாளையம் போகும் வழித்தடத்தின் மத்தியில் உள்ளது . தற்போது சங்கரன் கோயில் சேகரத்தைச் சேர்ந்த சபையாகும்.
சத்திரப்பட்டி செவல்பட்டி ஜமீனுக்கு உட்பட்டது.
செவல் பட்டியை ' சத்திரம் ' என்றும் அழைப்பர் . அந்த ஜமீன்தாரின் நிலங்கள் இங்கிருந்தன , சத்திரத்தைச் சார்ந்த கிராமமாதலால் சத்திரப்பட்டி என்றாயிற்று.
ஆரம்பத்தில் நாரைக்குளம் சத்திரப்பட்டி என்றே அழைத்தணர் . இவ்வூரையடுத்துள்ள நாரைக்குளத்தில் பிரதானமாக நாரைகளும் , மற்றும் பறக்கும் பன்னீராயிரம் பறவைகளும் உண்டு என்று அவ்வூர் பெரியவர் சாமியார் சொன்னார் , சாமுவேல் என்ற அவர் பெயர் சாமியார் என்றாயிற்று.
சத்திரப்பட்டியில் இலுப்பை , மா , எலுமிச்சை ஆகிய தோப்புகளும் நிரம்ப இருந்தனவாம்.
தொடக்கத்தில் இவ்வூரில் 18 குடும்பத்தினர் மேற்குடி மக்கள் வசித்தனர் . அவர்களின் கொடிய தர்பார் கொடிகட்டிப் பறந்தது. *தாழ்குலப் பெண்கள் மார்பில் சேலை போட்டுக் கொண்டு போகக்கூடாது.* திடீர் திடீரென்று தீ வட்டிக் கொள்ளைகள் நடைபெறும். அறுவடைக்கு ஜமீன்தார் வரும்பொழுது தாழ்குல மக்கள் *வாங்கா ஊதி வரவேற்க வேண்டுமாம்.* அனைவரும் ஜமீன்தாரின் கொத்தடிமைகளே.
140 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மிஷனெரிகள் இவ்வூருக்குள் நுழைந்தனர். கொத்தடிமைத்தனத்தையும் கொடுமை களையும் எதிர்த்தனர். அமுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தனர் , கிறிஸ்தவர்களாயினர் . இரு தோள் கொடுத்து அக்கிரமங்களை எதிர்த்தார்கள். ஆபிரகாம் என்ற உபதேசியார் நியமிக்கப்பட்டார். இன்று அழகான கோயிலும் அநேக கிறிஸ்தவக் குடும்பங்களும் உண்டு
சரித்திர களஞ்சியங்களில் திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment