புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனரி கிரஹாம் ஸ்டெயின்ஸ்

மிஷனரி கிரஹாம் ஸ்டெயின்ஸ்
1999ம் வருடம் ஜனவரி 23 . இதயங்கள் உடைந்த நாள்.
கிறிஸ்துவின் அருட்பணியாளர்களுக்கு சவாலைத் தந்தநாள்.
கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற தொழு நோயாளிகளின் நண்பனும் , அவரது இரு சின்னஞ்சிறிய தூதர்களைப் போன்ற குழந்தைகளும் தீயில் உயிருடன் கருகிய நாள் .
இந்திய நாட்டில் ஒரிசா என்ற மாநிலம் . தொழுநோயாளிகளுக்கென அமைக்கப்பட்ட அந்த மையத்திற்கு 1965ஆம் ஆண்டு கிரஹாம் ஸ்டெயின்ஸ் அடி எடுத்து வைத்தார்.
கடவுளின் அன்பை தொழுநோயாளிகளுக்கு காட்டி , அவர்கள் வாழ்வுக்கு 1941 - 1999 மறுவாழ்வு கொடுக்கவே அவர் அங்கு சென்றார்.
இளமையிலேயே ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்த இவர் 1983ம் ஆண்டு நற்குணசாலியான ஊழியர் கிளாடிஸ் என்ற ஆஸ்திரேலிய பெண்மணியை மணந்தார்.
இவரும் ஏற்கனவே இந்தியாவில் கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றியவர் . இன்னும் செயலில் காட்டிக்கொண்டிருக்கிறார் .
தீயகுணம் நிறைந்த திருட்டு மனிதர் கூட்டம் அன்று ( 23 . 1 . 1999 ) அவர்களைச் சூழ்ந்து கொண்டது . கிரஹாம் ஸ்டெயின்ஸ் , மகன்கள் பிலிப் ( 1 ) , தீமோத்தி 7 ) ஆகியோர் தங்கள் வாகனத்தில் இரவு உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அந்தக் கொடூரம் நடந்தது .
வேடர் கைகளில் சிக்கிய மான்களைப் போல , கயவர்களின் கைகளில் மாட்டி சிக்கிக் கொண்டனர் . அந்தோ பரிதாபம் . சின்னஞ்சிறு பாலகர்கள் தங்கள் தந்தையை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு , கதறி அழுது கொண்டிருக்கும் போதே , அவர்கள் ஈவு இரக்கமற்றவர்களால் மனசாட்சியேயில்லாமல் உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டனர் . கருகிய மலர்களான அவர்கள் கிறிஸ்துவில் மலர்ந்தனர் .
அவர் விட்டுச் சென்ற 80 தொழுநோயாளிகளையும் அவர் மனைவி கிளாடிசும் , மகள் எஸ்தரும் கனிவாய் கவனித்து வருகின்றனர் . . . . .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ....
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory