புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கால்டுவல்

(பிஷப் கால்டுவல் பங்களாவிற்க்கு ஒருவன் ஓடி வருகிறான்)
*வந்தவன்*: " ஐயா துரை அவர்களே எங்களை மன்னித்து விடுங்கள் ' ' ( அவர் கால்களில் விழுகிறான் )
*கால்டுவல்* : ' ' என்னப்பா நடந்தது ! எழுந்திரு ! ' ' வந்தவன் : நீங்க தெய்வம் ஐயா ! உங்களுக்கு துரோகம் செய்தவங்க வாழவே முடியாது ஐயா !
*கால்டுவல்*: " என்னப்பா , விபரமாகச் சொல் !
*வந்தவன்*: கொஞ்ச நாளைக்கு முன்னே எங்க ஊர்ல வந்து நீங்க பிரசங்கம் பண்ணும் போது , உங்களை நாங்கள் மண்டை உடைய கல் எறிஞ்சோம் ! ஆனால் அதுக்கு நாங்க அனுபவிக்கிறோம் ஐயா ! அனுபவிக்கிறோம் !
*கால்டுவல்*: என்னப்பா ! நடந்தது என்ன ?
*வந்தவன்*: எங்க ஊரே குலுங்கிப் போச்சு . காலரா வந்து ஊரையே அழிச்சிடும் போல தெரியுது . *உங்களைக் கல்லால் எறிஞ்சவங்க மரணப்படுக்கையில் இருக் காங்க !* நீங்க வாங்க ஐயா , எங்க ஊருக்கு ! *உங்கள் காலடி பட்டாத்தான்* எங்கள் ஊர் பிழைக்கும் ! அந்த கிறிஸ்துவைப் பற்றி சொல்லுங்க ! நிச்சயம் உங்களை யாருமே கல்லெறியமாட்டாங்க !
( கால்டுவல் புறப்படுகிறார் )
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory