நெல்லை திருமண்டிலத்தில் முதன் முதலில் தோன்றிய கிறிஸ்தவக் கிராமம்*
முதலூர் நெல்லை நாட்டில் புதிதாகக் கிறிஸ்தவம் தழுவிய மக்கள் ஆங்காங்கு சிதறிக் கிடந்தார்கள் . அவர்களுக்கு அதிகமான இடுக்கண்களும் - இன்னல்களும் எழுந்தன . அத்தகையோர் 28 பேரை ஒன்று கூட்டி முதன் முதலாக முழுக் கிறிஸ்தவக் கிராமமாக உருவான முதல் ஊர்தான் ( 1799 ) முதலூர் ஆகும் . 1803 ஆம் ஆண்டில் மகத்தான மிகாவேலின் ஆலயம் கட்டப்பட்டது ,
முதலூரை நிறுவியவர் சின்னமுத்து என்ற சிவனடியார் இவர் சுவாட்ஸ் ஐயர் மூலம் சிறிஸ்துவின் மந்தையில் சேர்ந்து தாவீது சுந்தரானந்தம் என்ற பெயரில் திருமுழுக்குப் பெற்று சபை விருத்திக்கு தீவிரமாக உழைத்தார் . எதிரிகளால் தாக்குண்டு பசகுதான் இரத்தச் சாட்சியாக மரித்தார் . நெல்லையின் முதல் இரத்தச் சாட்சி இவரே . அவர் கட்டி வளர்த்த சபையே முதலூர் .
நார்மன் என்ற மிஷனெரியின் உழைப்பால் ( 1882 ) முதலூர் கல்வி கேள்விகளில் முதல் தரக் கிராமமாக விளங்கியது . குளோரிந்தா , கால்டுவெல் போன்ற பக்திமான்களின் காலடிபட்ட புண்ணிய பூமி .
ஐயர் 1883 ஆம் ஆண்டில் சுமார் ஈராயிரம் பேர் அமர்ந்து ஆராதிக்கக்கூடிய அழகு ஆலயம் அமைக்கப்பட்டது . 216 அடி தூத்துக்குடி அறமாவட்ட உயரத்தில் மகத்தான கோபுரத்தையும் கொண்டது .
பெயரின் *நெல்லை மறைமண்டிலத்தில் முதன் முதலில் தோன்றிய கிறிஸ்தவக் குடியிருப்பு* முதலூர்.
*பழைய நூல்களில் இருந்து திரட்டியது*
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment