காலராவும் திருவிருந்து ஆராதனையும்*
நெல்லையில் பணிபுரிந்த மிஷனெரிகள் அதிகமாக காலரா வியாதிக்கான பணியில் தங்களை ஈடுபடுத்த வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.
சில மிஷனெரிகள் காலரா வியாதியினால் இறந்தும் உள்ளனர் .( எவரி - பேரன்புருக் )
இந்நிலையில் 1902ல் நாசரேத் பகுதியில் 108இவ்வியாதியின் பயங்கர நிலையால் மழைகாலத்தில் அநேகர் மாண்டனர் நாசரேத் போர்டிங் பள்ளியில் மட்டும் ஏழுபேர் இறந்தனர்.
கண்கலங்கிய கனம் மர்காஷிஸ் தீவிரமுயற்சி - மருத்துவ பணிகளை மேற்கொண்டும் எதிர்பார்த்த பலன் இல்லை.
கொள்ளை நோயினால் மக்கள் அழிந்த வேளையில் தாவீது இராஜா கர்த்தருடைய சமுகத்தில் விழுந்து மன்றாடியதுபோல மர்காஷிஸ் ஆலயத்திற்கு சென்று மன்றாடினார்.
தேவ சமூகத்தில் தினமும் இயேசு கிறிஸ்துவின் பாடுமரணங்களை உயிர்த்தே ழுதலை வருகையை நினைவுகூறவும். பாவிகளுக்காக மன்றாடும் பரலோக பிரசன்னத்தை தினசரி விசுவாசத்துடன் பார்க்கவும் தினசரி திருவிருந்து ஆராதனை நடத்த தீர்மானித்தார்.
அன்று முதல் இன்று வரை நாசரேத்தில் காலை 7 மணிதோறும் இவ்வாராதனை நடைபெறுவது இப்பகுதி மக்களுக்கு ஆசீர்வாதமே.
பிரதிஷ்டைமணி அடிப்பது. திருமேஜையில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பது போன்ற முறைகளும் ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment