புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

அந்தோணி

அதிகாலை ஜெபத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்த மிஷனரி
கி . பி . 251 , எகிப்தின் வட பாகத்தில் கோமா என்ற கிராமம் . மிகவும் செல்வச் செழிப்பான குடும்பம் ஒன்று அங்கு வசித்தது . அக்குடும்பத்தில் தலை மகனாக பிறந்தார் அந்தோணி .
கிறிஸ்தவ பெற்றோர்கள் இவரை மிகவும் கண்டிப்புடனும் நல் நடத்தையுடனும் வளர்த்தனர் . தீய நட்பினாலும் , கெட்ட பேச்சுக்களாலும் கறைபட்டுவிடாமல் காக்க சிறந்த இறையியல் அறிஞர்களைக் கொண்டு கல்வி கற்றுக் கொடுத்தனர் . அந்தோணி தனது இருபதாவது வயதை அடையும் முன்பே அவர் பெற்றோர்கள் மரித்துப்போனது பரிதாபம்.
கடவுளையே தியானித்து தூய வாழ்க்கை வாழ நினைத்த இவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து துறவற வாழ்வை மேற்கொண்டார் . ரொட்டியையும் , தண்ணீரையும் உணவாக உட்கொண்டார் . கிராம மக்களுக்கு தொந்தரவு ஏற்படாதபடி மனித நடமாட்டமில்லாத காட்டிற்குச் சென்று ஜெபத்திலும் , தியானத்திலும் தன் நாட்களைக் கழித்தார்.
ஒரு சமயம் , சில திருடர்கள் அவரைப் பிடித்து , அடித்து குற்றுயிராய் விட்ட போதிலும் கிறிஸ்துவின் அன்பை நினைத்து தன் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தார் . அந்தோணியாரின் தூய வாழ்க்கையையும் , சுய வெறுப்பையும் , மக்கள் மீதுள்ள அன்பையும் கண்ட சுற்றுபுறத்தார் அவர்மீது அளவற்ற மதிப்பு கொண்டனர்.
ஜெப நேரத்தை தவிர மீதமுள்ள நேரத்தை நிலத்தைப் பண்படுத்தி பயிரிடும் வேலை செய்து வந்தார் . அலெக்சாண்டிரியா பட்டணத்தில் இவரின் பிரசங்கத்தால் மனந்திரும்பியவர்கள் எண்ணற்றோர் ஆவர் . வானத்திற்கு நேரே தன் கைகளை உயர்த்தி ஜெபிக்கும் பழக்கம் உடைய இவர் . அதிகாலை ஜெபத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்த இம்மகான் தனது 105வது வயதில் தனது மரண நாளை முன்னறிவித்து அவ்விதமே இறைபாதம் சரணடைந்தார் .
அருட்பணியாளர் புத்தகத்தில் திரட்டியது
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory