தங்கள் சாமியினும் வல்லமையான சாமி ஒருவர் இருக்கிறாரா?*
நெல்லை நாட்டில் பச்சையாறு ஒரு குட்டி ஜீவநதி , அதன் கீழ் கரையில் ' திதி கொடுப்பதற்காகப் பல ஊர்களிலுமிருந்து மக்கள் கூடுவர் . இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் ஒரு நிகழ்ச்சி திதி கொடுப்பதாகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் செழிப்பு நன்றாயிருந் தமையால் பச்சையாற்றின் கரையில் சோறு பொங்கி திதி கொடுக்கும் வழக்கமிருந்தது. கீழக்கரையில் அமைந்த அந்த இடத்திற்கு ' திதியூர் ' என்ற பேர் ஏற்பட்டது . மக்கள் குடியேறி மக்கள் வாயில் அச்சொல் மருவி , மருவி ' திடியூர் ' என்றாயிற்று . மேல்கரையில் ஒரு ஊரும் , சற்று மேற்கே தள்ளி இன்னொரு ஊரும் வரவே கீழத்திடி யூர் , மேலத்திடியூர் , நடுத்திடியூர் என்று மூன்று ஊர்கள் தோன்றின.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு . . . மேலத்திடியூரில் கொடை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது . குடும்பத்திற்கு ஒருவர் சாமியாடிக் கொண்டிருந்தனர் . அச்சமயத்தில் ஓர் ஆங்கில மிஷனெரியும் அவரோடு சிலரும் கைத்தாளங்களோடு பாட்டுப் பாடிக்கொண்டு அங்கு வந்தனர் . பாட்டொலி கேட்டு சாமியாட்டம் நின்று விட்டது. கொட்டு மேளங்களை முழக்கியும் சாமி வர வில்லை . வந்தவர்கள் இயேசு சாமி பற்றிய நற்செய்தியை அறிவித்தனர். தங்கள் சாமியினும் வல்லமையான சாமி ஒருவர் இருக்கிறார் " ன்று கண்டு அந்த இடத்திலேயே இரு குடும்பத்தார் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள் .இந்து பீடங்கள் இருந்த அதே இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் தோன்றியது.
வரலாற்று சுவடுகளிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment