புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மிஷனெரி ஜாண் ஃபாக்ஸ்

மிஷனெரி ஜாண் ஃபாக்ஸ் நினைவு தினம்* ஏப்ரல் 8
இங்கிலாந்தில் சீர்திருத்தம் ஏற்பட்ட காலம் . ஒவ்வொரு திருச்சபைகளும் புதுப்பொலிவுடன் செயல்பட ஆரம்பித்தன . வேதாகமம் பார்த்திராத மக்கள் , புதிய வேதாகமத்தை தங்கள் கைகளில் பெற்றுக்கொண்டனர்.
எராஸ்மஸ் என்பவர் கிரேக்க மொழியிலிருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார் . இதனால் , வேதப் புத்தகத்தின் சத்தியங்களை அறிந்து கொண்ட மக்கள் , தவறான கோட்பாடுகளுக்கும் , கொள்கைகளுக்கும் எதிர்த்து நின்றனர் . சபை சீர்படத் தொடங்கியது.
மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க கோட்பாடுகளுக்கு எதிராக , 95சட்டதிட்டங்களை விட்டன்பர்க் தேவாலயத்தில் அறைந்து வைத்தார் . அக்காலக்கட்டத்தில் , வாழ்ந்தவரே ஜான் ஃபாக்ஸ் . 1534ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இறைப்பட்டம் பெற்ற இவர் , சீர்திருத்த சிந்தனைகளை உடையவராகக் காணப்பட்டார்.
இவர் லேட்டிமர் மற்றும் வில்லியம் டிண்டேல் என்பவர்களை சந்தித்து , அவர்களின் தரிசனங்களோடு தன்னையும் சேர்த்துக் கொண்டார் . லண்டனில் சிறந்த போதனை ஆசிரியராக விளங்கிய இவர் , துண்டு பிரதிகள் மூலம் , தனது கருத்துகளை மக்கள் உணரச் செய்தார் . இயேசுகிறிஸ்துவும் - அந்திகிறிஸ்துவும் என்ற தலைப்பிலும் , நன்மை - தீமை என்ற கருத்திலும் , உண்மை - பொய் என்ற சிந்தனையிலும் பல கட்டுரைகளை எழுதி மக்கள் கைகளில் கொடுத்தார் . இதனால் மக்கள் உண்மையை அறிந்து தீமையான காரியங்களை விட்டுவிலகி , இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
அப்போதைய அரசுக்கு எதிராக இவர் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . பல சீர்திருத்தவாதிகளின் மரணம் , இவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது . அவர்கள் வாழ்வைக் குறித்ததான , மிகச்சிறந்த நூலை எழுதினார் . " ஃபாக்ஸ் புக் ஆப் மார்டையர்ஸ் " என்பதே அச்சிறந்த நூல் . இதில் , இயேசுகிறிஸ்துவுக்காக தங்கள் உயிரை பணயம் செய்த உத்தம மனிதர்களின் உண்மை வரலாறுகள் இடம் பெற்றுள்ளன . வாசிப்போரை கிறிஸ்துவுக்குள் ஈர்க்கும் , சிறந்த கருவூலத்தை உலகிற்கு தந்தவர் இவர்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory