திருமண்டல பள்ளிகளும் சபைகளும் உருவான விதம்*
*சபையை உருவாக்க முடியாத இடத்தில் பள்ளியை அமைப்பது இரேனியஸ் ஐயரின் வழக்கம்*
*போலையர்புரம் வரலாறு*
சபையை உருவாக்க முடியாத இடத்தில் பள்ளியை அமைப்பது இரேனியஸ் ஐயரின் வழக்கம் அதன்படி 1820 இல் ரேனியஸ் ஐயரவர்கள் செந்தில் காத்தபுரத்தில் ஒரு பள்ளி நிறுவினார்.
போலையர் என்ற பாதிரியார் இடையன்குடிக்குக் குதிரை யில் செல்வார்களாம் . போகும் வழியில் ஒரு பெரிய ஆலமரத் தோப்பு உண்டாம் . அங்கு தங்கி சற்று இளைப்பாறும் பொழுது அண்மையிலுள்ள செந்தில் காத்தபுரத்து மக்கள் பெருங்கூட்ட மாகக் கூடி வருவார்களாம்.
ஆற்றோரத்தில் கூடி வந்த மக்களுக்கு பவுலும் - சீலாவும் நற்செய்தி நவின்றது போன்று , போலையரும் கூடி வந்த மக்களுக்கு சுவையாகச் சுவிசேஷம் கூறுவாராம் . அங்குள்ள மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஓர் சபை உருவானது . செந்தில் காத்தபுரத்து மக்கள் தங்கள் ஊருக்குப் போலையர் நினைவாகப் ' *போலையர் புரம்* என்று பேர் வைத்தார்களாம்.
வரலாற்று புத்தகங்களிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment