*பல மிஷனெரிகள் பற்பல தரிசனங்களுடன் கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கக் கடந்து* சென்ற காலம் அது
சீன தேசம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அது ஒரு கம்யூனிச நாடு . பொதுவுடமைக் கொள்கை பரவியிருந்தது .
கடவுள் பக்தியற்ற அரசாங்கம் மக்களை ஆட்சி செய்து கொண்டிருந்தது . எனவே நீதியும் , நேர்மையும் பெயரளவிலே காணப்பட்டது .
இயேசு இல்லாத நாடு எப்படியிருக்கும் ? இருளில் அல்லவா மூழ்கிக் கிடக்கும் ? சீன தேசத்தை நோக்கிப் பல மிஷனெரிகள் பற்பல தரிசனங்களுடன் கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கக் கடந்து சென்று கொண்டிருந்தனர் . சிலர் பாதியிலேயே திரும்பிவிட்டனர்.
ஏனெனில் உபத்திரவங்களும் ,போராட்டங்களும் அங்கு மலிந்து கிடந்தன .
*லோத்தி மூன்* தன்னந்தனியான பெண்ணாக சீன தேசத்தை நோக்கிப் புறப்பட்டாள்.
உள்ளத்தில் இயேசு இருந்ததால் அவள் வேறெதற்கும் பயப்படவில்லை .
சீனர்களின் உள்ளத்திலும் , இல்லத்திலும் கிறிஸ்துவே வீற்றிருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளே அவர் சிந்தையில் நிறைந்திருந்தது .
1885ல் ஆரம்பிக்கப்பட்ட அப்பயணம் மிகவும் சுறுசுறுப்படைந்து பற்பல மக்களை சந்திக்கச் செய்தது .
பிங்குடு என்னும் இடத்தில் பணி செய்ய இடம் பெயர்ந்தபோது அவர்களுக்கு 44 வயதாகியிருந்தது .
அங்குள்ள மக்கள் அம்மையாரைப் பார்த்துப் பேய் பிடித்த கிழவி என்று தூற்றினர் .
ஆயினும் அஞ்சாநெஞ்சத்துடன் பணியைத் தொடர்ந்தார் லோத்தி .
விடுப்பு எடுக்கவேண்டிய காலத்தில் கூட விடுமுறை எடுக்காமல் மும்முரமாகச் சுவிசேஷப் பணியில் ஈடுபடலானார் . இதினிமித்தம் திருச்சபை ஒன்றை ஆரம்பித்தார் .
1889ம் ஆண்டில் ஞானஸ்நான ஆராதனையும் நடைபெற்றது .
இருபது ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேலானோர் இயேசுகிறிஸ்துவைத்தம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர் .
------------------------------------------------------------
*திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
*திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
♂ *Manna Selvakumar*
mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment