*திருப்புளியங்குடி திருச்சபை வந்த வரலாறு*
ஸ்ரீவைகுண்டத்திற்குக் கிழக்கில் திருப்புளியங்குடி என்ற ஒரு சிறு கிராமம் உள்ளது.
நம்பி என்பவர் அதில் வாழ்ந்து வந்தார் .
1818ஆம் ஆண்டு அவருடைய மூன்றாம் மகன் கையில் புதிய ஏற்பாடு கிடைத்தது .
வேதத்தை வாசித்த அக்குடும்பத்தினர் ஒரே மெய்யான தேவனை வணங்க முடிவு செய்தனர் .
நம்பியின் மூன்றாம் மகனை ஹாப்வ் ஐயரிடம் புதிய ஏற்பாட்டைக் கொடுத்தவர் வழி நடத்தினார் .
அவர் சில புத்தகங்களைத் தந்து அதை வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார் .
பின்பு அக்குடும்பம் 1820இல் ரேனியஸ் ஐயரைப் பார்த்தார்கள் . நம்பியின் மூன்றாவது மகன் சுப்பிரமணியன் செமினெரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் .
நம்பியும் அவருடைய குடும்பத்தாரும் ஊராரால் உபத்திரவப்பட்டார்கள் , ஆனால் அவர்கள் பொறுமையோடு இருந்தனர் . அதைக்கண்டு நம்பியின் அண்ணன் மகன் லட்சுமணன் ஆண்டவரைக் குடும்பத்தோடு ஏற்றுக்கொண்டார் .
1823ஆம் ஆண்டு ரேனியஸ் ஒரு ஆலயத்தைத் திருப்புளியங்குடியில் கட்டினார் .
நம்பியின் குடும்பத்தார் அவ்வாலயம் கட்ட உதவி செய்தனர் .
அங்கு ஞானஸ்நானம் கொடுக்க ரேனியஸ் ஏற்பாடு செய்தார் .
நம்பி குடும்பத்தினரைப் பகைவர் அடித்துத் துன்பப்படுத்தினார்கள் . அதில் காயங்களால் நம்பியின் மனைவி மரணமடைந்தார் .
C . M . S . திருச்சபையின் முதல் இரத்த சாட்சி இந்தத் தாயார்தான் ,
1823 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ரேனியஸ் ஐயர் திருப்புளியங்குடி , ஆலயத்தில் நம்பிக் குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப்பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் .
பின்பு அவ்வூரில் ரேனியஸ் ஒரு பள்ளிக் கூடத்தையும் ஆரம்பித்தார் .
நம்பியின் மகன் சுப்பிரமணியனுக்கு தீத்து என ஞானஸ்நானம் கொடுத்திருந்தார் .
திருப்புளியங்குடி சபை உபதேசியாராகவும் பள்ளி ஆசிரியராகவும் தீத்துவை ரேனியஸ் நியமித்தார் .
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment