புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பால் சுந்தரம்

தமிழ்நாட்டின் மூடி பிரசங்கியாராக ஆன்மீக எழுப்புதலை உண்டுபண்ணினவர் பால் சுந்தரம் கடம்பவனம் பிறந்த தினம் இன்று (ஜூன் 25)
மனதில் மாற்றம் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்து , சைவ பக்தராய் வளர்ந்து தன் 20ம் வயதில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு , ஞானஸ்நானம் பெற்று , புதிய மனிதனாக வளர்ந்து , இறுதிவரை இயேசு கிறிஸ்துவின் அடியாராகவும் சாட்சியாகவும் வாழ்ந்த ஜெபவீரர் , தந்தை பால் கடம்பவனம்.
ஞானஸ்நானம் பெற்றபின் ஒரு கிறிஸ்தவ துறவியாக விரும்பினார் , ஆயினும் , அம்முயற்சியைக் கைவிட்டு கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்கப் பயணச் செயலாளராக பணியாற்றினார் .
1912ம் ஆண்டு சுதேச மிஷனெரி சாங்க பணியினைஏற்றார் .
பல இடங்களில் அருளுரையாற்றும் பொறுப்பு கிடைத்தது .
கூட்டங்களில் கலந்து கொண்டோர் இவரின் அருளுரையைக் கேட்டவுடன் மனதில் மாற்றமடைந்து , கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர் .
" இயேசுவை நம்பி கெட்டவன் இல்லை . இயேசுவுக்குக் கொடுத்து கெட்டவனில்லை. இயேசுவுக்கு உழைத்து கெட்டவனில்லை . இது பால் கடம்பவனத்தின் அசையாதஅருளுரையின் சாரம் .
இவர் பல ஆவிக்குரிய நூல்களை எழுதியுள்ளார்.
நான் ஏன் கிறிஸ்தவனானேன் ? ( 1910 ) மற்றும் அனுபவ திருஷ்டாந்தங்கள் ( 1974 ) என்ற நூல்வரை சுமார் 16 நூல்கள் எழுதியுள்ளார்.
பால் கடம்பவனத்தின் நூல்கள் யாவும் , இரட்சிப்பின் அனுபவங்களாக வரலாற்று சான்றுகளாக , நற்செய்திப் பணி ஊடகங்களாக , ஜெபத்தின் செயல்களாக விளங்குகின்றன .
இவரது பேச்சு , கல் நெஞ்சங்களையும் உடைக்கும் வலிமைபெற்றவை . ' தமிழ்நாட்டின் மூடி பிரசங்கியாராக ' ஆன்மீக எழுப்புதலை உண்டுபண்ணினார் .
இறைவனே தம்மை அவரின் அடியாராக தெரிந்துக் கொண்டதாக அறிவித்து , இறுதிவரை உண்மையான கிறிஸ்தவ ஜெபவீரராக விளங்கி , தன் வாழ்வில் வந்த பல சோதனைகளையும் மேற்கொண்டு , கிறிஸ்துவுக்குள் ஆழமான விசுவாசத்தை செயலில் காட்டி மக்களின் முன்மாதிரியானார் .
இவர் தம் முதிர்வயதில் , கண்ணொளி இழந்த பின்னும் , தன்னைக் காண வரும் அனைவரின் தலைமீதும் கைகள் வைத்து ஜெபித்து , அன்பு பாராட்டுவார்.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory