புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பக்த்சிங்

யெகோவா ஷம்மா சபையை உருவாக்கிய பஞ்சாபின் சீக்கியரான பக்த்சிங்*
ஆசியாவிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆவிக்குரியத் தகப்பனாகவும் , விசுவாசிகளின் மாதிரியாகவும் விளங்கியவர் பகத்சிங் .
பஞ்சாபின் சீக்கிய குடும்பத்தில் பிறந்த இவர் , இங்கிலாந்து சென்று பொறியாளர் படிப்பை முடித்தார்.
1929ஆம் ஆண்டு உலகப்பிரகாரமான வாழ்வில் உன்னத நிலையை அடைந்தார் .
கிறிஸ்து உள்ளத்தில் வர புது சிருஷ்டியானார் .
சீக்கிய மதப் பெற்றோர் அவரை பம்பாயில் விட்டு விட்டுத் தங்கள் நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தனர் .
தன் ஜீவனையும் , தனக்கு அன்பானவர்களையும் விட மேலாக கர்த்தரையே நேசித்ததால் , கர்த்தருடைய வார்த்தையே அவருக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் மாறினது . பம்பாயில் தன் ஊழியத்தை ஆரம்பித்த பக்த்சிங் , பின்னர் பஞ்சாபிலும் , கராச்சியிலும் ஊழியத்தைத் தொடர்ந்தார் .
குறுகிய காலத்திற்குள் தேவன் அவரை உயர்த்தினார் .
ஒரு மாதத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட இடத்திலிருந்து சுவிசேஷப் பணிக்கு அழைப்பு வந்தது . அவரின் ஊழியத்தின் பயனாக ஆயிரக்கணக்கானோர் கிறஸ்துவைக் கண்டுகொண்டனர் .
சென்னையில் கால்பதித்த அவர் யெகோவா ஷம்மா என்ற சபையை 1941ம் ஆண்டு ஆரம்பித்தார் .
இச்சபை விரைவாக வளர ஆரம்பித்தது . இந்தியாவின் பல பாகங்களிலும் , பாகிஸ்தான் , இலங்கை , ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கான சபைகள் உருவாகின .
ஆண்டவர் சகோதரரை அற்புதமாகப் பயன்படுத்தினார் .
வேதவாசிப்பும் , ஜெபமும் , ஆழ்ந்த விசுவாசமும் இவரது வெற்றிக்குக் காரணங்களாயின .
விசுவாசிகளுக்கு மத்தியில் ஐக்கியத்தை நிலைப்படுத்த அன்பின் விருந்தை ஆரம்பித்த இவர் ஓர் அன்பின் ஊழியராகவே வாழ்ந்து தன் ஓட்டத்தை முடித்தார் .
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory