*மீயகான் பள்ளி திருச்சபை வரலாறு*
மீயகான் பள்ளி கொங்கராயர் குறிச்சி சேகரத்திற்கு உட்பட்டது .
கொங்கராயர் குறிச்சி , தாமிரபரணி ஆற்றுக்கு வடகரையிலுள்ள அழகு கிராமம் , அது 1824 ஆம் ஆண்டில் தோன்றிய புராதன சபை ,
மீயகான்பள்ளியின் பழைய பெயர் நாணல் காடு என்பதாகும்.
மக்கள் ஆற்றுக்கு அருகில் குடியிருந்தனர் .
1869 இல் பண்ணைவிளை வட்டத்திற்குள்ளும் , பின்பு கொங்கராயர் குறிச்சி சேகரத்திற்குள்ளும் இருந்துவரும் சிறு சபை மீயகான்பள்ளி.
முதல் கிறிஸ்தவர் வேதநாயகம் என்ற சுப்பையா .
இவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனதால் புறமதத்தினரின் நெருக்குதலும் , துன்பங்களும் அதிகமாயின .
ஆற்று வெள்ளத்தாலும் அடிக்கடி வீடுகள் சேதமாயின . எனவே , யோர்தான் போன்று ஆற்று வளமிக்க இடத்தைவிட்டு ஊருக்கு வடக்கே சிறு மலைகளும் , பாறைகளும் அதிகமாயிருந்த இடத்திற்கு வந்தனர் .
அவர்கள் குடியிருக்கத் தேர்ந்தெடுத்த இடம் சிவசுப்பிரமணியம் என்பாருக்குச் சொந்தமானது .
எனவே சிவசுப்பிரமணியபுரம் என்று அழைத்தனர் .
அதன் பக்கத்தில் இசுலாமிய குடியிருப்பான மீயகான்பள்ளி என்ற ஊர் ஏற்கெனவே இருந்தது .
அந்தப் பெயரே கிறிஸ்தவக் குடியிருப்புக்கும் நிலைத்துவிட்டது .
கூரைக் கோயில் காரைக் கோயிலாகி 1947 ஆகஸ்ட் 22 இல் தூய பவுலின் ஆலயம் என்ற பெயரில் செல்வின் பேராயரவர்களால் அருட்பொழிவு பெற்றது .
இப்பொழுது நாற்பது குடும்பங்களைக் கொண்ட மிகுந்த உற்சாகமான சபையாக இயங்குகிறது .
இவ்வூருக்கு வடக்கே சிறிது தொலைவில் நெல்லை - தூத்துக்குடி பெரிய ரோடு செல்கிறது .
பக்கத்தில் ஒரு விவசாயக் கல்லூரி அவதாரமெடுத்துள்ளது.
நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசமோ மலைகளும் , பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம் என்ற வேத வாக்கு இவ்வூரில் நிறைவேறுகிறது.
No comments:
Post a Comment